செய்திகள் :

``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?

post image

தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர்.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்தமற்றதாக கருதி குகையில் தனது தனிமையான வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார்.

டிரைவராக பணியாற்றிய வந்த ஹெங்காய் தனது குடும்ப கடனுக்காக தினமும் 10 மணி நேரம் வேலை செய்துள்ளார். இருப்பினும் அவரால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.

குகை

2021 ஆம் ஆண்டில் நகர வாழ்க்கையிலிருந்து விடுபட நினைத்து தனது மாத சம்பளம், தனது வேலை அனைத்தையும் கைவிட்டுவிட்டு குகையில் தனிமை வாழ்க்கை வாழ முடிவு செய்ததாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது சொத்துகளை அவரது உறவினர்கள் விற்றதால் ஏமாற்றமடைந்து வங்கிகளுக்கு கடன்பட்ட பணத்தையும் செலுத்துவதை கைவிட்டுள்ளார்.

தனது நிலத்தில் 50 சதுர மீட்டர் உள்ள குகையை ஒரு இடமாக மாற்றி அதில் ஒரு எளிய வீடு அமைத்து அதில் வாழ முடிவு செய்திருக்கிறார். காலை 8:00 மணிக்கு எழுந்து படிப்பது, நடைபயிற்சி செய்வது, தனது நிலத்தை பார்வையிடுவது இரவு 10 மணிக்கு தூங்குவது என அந்த நாளை கழிக்கிறார்.

வீட்டில் வளர்த்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டுமே இவர் செலவு செய்கிறார். இந்த குகை குறித்த வாழ்க்கையை அவரது 40000 பாலோவர்ஸ் கொண்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் நகரத்தில் பணிபுரியும் போது இந்த எளிய வாழ்க்கைக்காக ஏங்கியதாகவும் உண்மையான அன்பு கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதையும் அவர் திருமணம் குறித்து பண விவகாரம் குறித்தும் அவர் அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Ahmedabad Crash: ``10 நிமிடங்களுக்கு முன்பு சென்றிருந்தால் நானும்..." - விமானத்தை தவறவிட்ட பெண்

10 நிமிட தாமதத்தால் வாழ்க்கையை இழந்தவர்களை பார்த்திருப்போம். ஆனால் 10 நிமிட தாமதம்தான் என் உயிரை காப்பாற்றியிருக்கிறது என வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார் பூமி சௌஹான். குஜராத்தின் அகமதாபாத் விமான ... மேலும் பார்க்க

`498A Tea Cafe' - மாமியார் வீட்டுக்கு எதிரே கையில் விலங்குடன் டீ கடை நடத்தும் இளைஞர் -பின்னணி என்ன?

மாமியார் குடும்பத்தினர் தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை வழக்கை தனித்துவமான முறையில் எதிர்கொண்டு வருகிறார் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.2019ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ... மேலும் பார்க்க

``இன்ஸ்டாவில் 2 பாலோவர்ஸ் குறைந்து விட்டனர்..'' - மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார்

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்ப... மேலும் பார்க்க

``டிக்கெட் வாங்காமல் விமானத்தில் 120 தடவை பயணம்'' - மோசடி ஆசாமி செய்த வேலை..

அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயதான டைரன் அலெக்சாண்டர் என்பவர், தன்னை ஒரு விமான பணியாளராக காட்டிக்கொண்டு விமானங்களில் இலவசமாக பயணித்துள்ளார். கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட விமானங்களில் இவ்வாறு மோசடியில் ... மேலும் பார்க்க

Border: நெதர்லாந்தில் தூங்கி, பெல்ஜியத்தில் விழிக்கும் மக்கள்; வீடுகளில் இருக்கும் எல்லை கோடுகள்!

இரு நாட்டின் எல்லைகள் என்றாலே, அங்கு பலத்த பாதுகாப்பும் பதற்றமும் இருக்கும். ஆனால் இங்கு உள்ள இரு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள எல்லை கூலாக உள்ளது. கடைகள், வீடுகள், தெருக்களுக்கு இடையே எல்லைகள் பிரிகின... மேலும் பார்க்க

Air India Crash: ``விபத்துக்கு முன் இப்படி விளம்பர காட்சி வைத்தது ஏன்?'' - நெட்டிசன்கள் விமர்சனம்

விமான விபத்து நடந்த அன்று காலையிலேயே MidDay என்ற பத்திரிகையின் முன்பக்கத்தில் KidZania எனும் விளம்பரத்தில் Air India விமானம் ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து வெளியே வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்று இர... மேலும் பார்க்க