ஈரான் மீதான இஸ்ரேஸ் தாக்குதல்: டிரம்ப்புக்கு பின்னடைவா? பெரு வெற்றியா?
``குடும்பம், வேலை வேண்டாம்..” குகையில் தனிமை வாழ்க்கை மேற்கொண்ட சீன இளைஞர் - என்ன காரணம் தெரியுமா?
தனது வேலையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கை விரும்பி குகையில் தஞ்சம் புகுந்துள்ளார் சீனாவை சேர்ந்த ஒருவர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது மின் ஹெங்காய் என்பவர் வேலை மற்றும் திருமணம் அர்த்தமற்றதாக கருதி குகையில் தனது தனிமையான வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளார்.
டிரைவராக பணியாற்றிய வந்த ஹெங்காய் தனது குடும்ப கடனுக்காக தினமும் 10 மணி நேரம் வேலை செய்துள்ளார். இருப்பினும் அவரால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
2021 ஆம் ஆண்டில் நகர வாழ்க்கையிலிருந்து விடுபட நினைத்து தனது மாத சம்பளம், தனது வேலை அனைத்தையும் கைவிட்டுவிட்டு குகையில் தனிமை வாழ்க்கை வாழ முடிவு செய்ததாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தனது சொத்துகளை அவரது உறவினர்கள் விற்றதால் ஏமாற்றமடைந்து வங்கிகளுக்கு கடன்பட்ட பணத்தையும் செலுத்துவதை கைவிட்டுள்ளார்.
தனது நிலத்தில் 50 சதுர மீட்டர் உள்ள குகையை ஒரு இடமாக மாற்றி அதில் ஒரு எளிய வீடு அமைத்து அதில் வாழ முடிவு செய்திருக்கிறார். காலை 8:00 மணிக்கு எழுந்து படிப்பது, நடைபயிற்சி செய்வது, தனது நிலத்தை பார்வையிடுவது இரவு 10 மணிக்கு தூங்குவது என அந்த நாளை கழிக்கிறார்.

வீட்டில் வளர்த்த காய்கறிகளை மட்டும் சாப்பிட்டு அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டுமே இவர் செலவு செய்கிறார். இந்த குகை குறித்த வாழ்க்கையை அவரது 40000 பாலோவர்ஸ் கொண்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில் நகரத்தில் பணிபுரியும் போது இந்த எளிய வாழ்க்கைக்காக ஏங்கியதாகவும் உண்மையான அன்பு கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதையும் அவர் திருமணம் குறித்து பண விவகாரம் குறித்தும் அவர் அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.