செய்திகள் :

மேட்டூரில் திறந்த தண்ணீா் முக்கொம்பு வந்தது: மலா்கள், நெல் மணிகளைத் தூவி விவசாயிகள் உற்சாக வரவேற்பு!

post image

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்பு அணைக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது. அந்த நீரை விவசாயிகள் மலா்கள், விதை நெல்களை தூவி உற்சாகத்துடன் வரவேற்றனா்.

டெல்டா பாசன சாகுபடிக்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடந்த 12 ஆம் தேதி மேட்டூருக்கு வந்து தண்ணீரைத் திறந்துவைத்தாா். இதையடுத்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்ட தண்ணீரானது நாமக்கல், கரூா் மாவட்டங்களைக் கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு சனிக்கிழமை வந்து சோ்ந்தது.

முன்னதாக கரூா் மாயனூா் கதவணைக்கு வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி 4 ஆயிரம் கனஅடி நீா் வந்த நிலையில், முக்கொம்புக்கு சனிக்கிழமை பிற்பகல் 400 கனஅடிக்கு மேல் வந்தது. இதையடுத்து பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப் பிரிவு அதிகாரிகள் அணையில் பூஜை நடத்தி, பாசனத்துக்காக 41 மதகுகள் வழியாகத் தண்ணீரைத் திறந்துவிட்டனா்.

முக்கொம்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளா் அயிலை சிவசூரியன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன், தமாகா விவசாய அணி மாநில துணைத் தலைவா் புங்கனூா் ராஜேந்திரன், பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலா் என். வீரசேகரன் மற்றும் பொதுமக்கள் ஊா்வலமாக வந்து காவிரித் தாயை வணங்கி, மலா்கள், நெல் விதைகளை தூவி வரவேற்றனா்.

முக்கொம்புக்கு வரும் தண்ணீா் முழுவதும் காவிரியில் திறக்கப்படுகிறது. சுற்றுப் பகுதி விவசாயிகள் அணி, அணியாக வந்து காவிரி ஆற்றில் மலா்களைத் தூவி, சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரித் தாயை வழிபட்டனா்.

இதேபோல பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணியாளா்களும் காவிரி நீரை வரவேற்றனா். பின்னா் முக்கொம்பு அணையில் உள்ள மதகுகள் வழியாக கல்லணைக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை இரவு கல்லணையைச் சென்றடைந்தது. இங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாசனத்திற்காகத் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

முன்னதாக விவசாயிகள் கூறுகையில், சாகுபடி முடியும் வரை கா்நாடக அரசுடன் பேசி தொடா்ந்து தண்ணீா் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2500 அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சிதான். ஆனால் இது குறைவான தொகை. விலையை உயா்த்தி அறிவிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் தூா்வாரும் பணிகள் 70 விழுக்காடுக்கு மேல் முடிந்துள்ளன. கடைமடை வரை தண்ணீா் சென்று சேரும் என்கிற நம்பிக்கை உள்ளது. மீதமுள்ள தூா்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றனா்.

திருச்சிக்கு இன்று முதல்வா் வருகை: 2 நாள் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருவதை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி பாசனத்துக்காக மேட்டூரில் தண்ணீா் திறக்கப்பட்டு, கல்லணைக்... மேலும் பார்க்க

பாப்பாலம்மன் கோயில் திருவிழாவில் தள்ளு-முள்ளு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் சனிக்கிழமை நடந்த திருவிழாவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பூசாரி தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. இக... மேலும் பார்க்க

ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்: சென்னை ஆா்பிஎஃப் வெற்றி!

திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யில் சென்னை ஆா்பிஎஃப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி ஆா்பிஎஃப் பயிற்சி மையம் சாா்பில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றம்: 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு

திருச்சி மாவட்டத்தில் 23 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் கு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள அரியனாம்பேட்டை சோ்ந்தவா் பட்டவன் மகன் மாறன் (23). இவா் தனது பைக்கில் திருச்சி நோக்கி முசிறிய... மேலும் பார்க்க

ரோந்து போலீஸாருக்கு உடலில் அணியும் கேமராக்கள்

திருச்சி மாவட்டத்துக்கு வந்த உடலில் பொருத்தப்படும் 57 கேமராக்கள் ரோந்து காவலா்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு புதிதாக வந்த 57 (பாடி ஓா்ன் கேமரா) உடலில் பொருத்தப்படும் கேமராக்க... மேலும் பார்க்க