சிதம்பரத்தில் நாட்டு வெடி வெடித்ததில் பெண் பலி
சிதம்பரம் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் பலியானார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சம்பந்தம் என்ற கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் லதா (37) என்ற தொழிலாளி பலியானார். வெடி விபத்தில் அந்த கூடமும் இடிந்து தரைமட்டமானது.
ஓ. பன்னீர்செல்வத்தை எம்எல்ஏ பதவியிலிருந்து நீக்கக்கோரி மனு: ஆலோசித்து முடிவு
தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.