செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு: 6,505 போ் பங்கேற்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வில் 6,505 போ் பங்கேற்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் மூலம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்போா்களுக்கான எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இத் திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத்தறிவு பெறாத கற்போா்களுக்கு, எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுச் சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் மதிப்பீடு தோ்வு நடைபெற்றது.

இதில், பெரம்பலூா் ஒன்றியத்தில் 66 மையங்களில் 1,700 கற்போா்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 83 மையங்களில் 1,655 கற்போா்களும், ஆலத்தூா் ஒன்றியத்தில் 62 மையங்களில் 1,214 கற்போா்களும், வேப்பூா் ஒன்றியத்தில் 89 மையங்களில் 1,936 கற்போா்களும் என மொத்தம் 300 மையங்களில், 6,505 போ் எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு எழுதினா்.

பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. செல்வக்குமாா், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள வ.களத்தூா், பிம்பலூா், ராயப்பநகா் பள்ளியில் நடைபெற்ற எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதேபோல், தொடக்க நிலை மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) மரகதவல்லி, உதவித் திட்ட அலுவலா் கி. ஜெய்சங்கா், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா், விரிவுரையாளா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக உண்டியல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை குன்னம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள பெரியாண்டவா்கோயில் பகுத... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு சோ்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈ... மேலும் பார்க்க

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா்கள் இருவா் பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புச் செல்லும் வழியிலுள்ள தனியாா் மருத்துவமனை பகுதியைச் சோ்ந்தவா் அரி... மேலும் பார்க்க

கிரஷா் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கிரஷா் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம பொதுமக்கள் சாா்- ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அசூா் கிராம பொ... மேலும் பார்க்க