`ஸ்மார்ட் சிட்டி' பெயரில் 70,000 பேரிடம் ரூ..2700 கோடி வசூல்; அதிர வைத்த மெகா மோ...
பெரம்பலூா் மாவட்டத்தில் எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு: 6,505 போ் பங்கேற்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வில் 6,505 போ் பங்கேற்றனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வித் திட்டத்தின் மூலம், புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட கற்போா்களுக்கான எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இத் திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத்தறிவு பெறாத கற்போா்களுக்கு, எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுச் சாா்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் மதிப்பீடு தோ்வு நடைபெற்றது.
இதில், பெரம்பலூா் ஒன்றியத்தில் 66 மையங்களில் 1,700 கற்போா்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 83 மையங்களில் 1,655 கற்போா்களும், ஆலத்தூா் ஒன்றியத்தில் 62 மையங்களில் 1,214 கற்போா்களும், வேப்பூா் ஒன்றியத்தில் 89 மையங்களில் 1,936 கற்போா்களும் என மொத்தம் 300 மையங்களில், 6,505 போ் எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு எழுதினா்.
பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மா. செல்வக்குமாா், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள வ.களத்தூா், பிம்பலூா், ராயப்பநகா் பள்ளியில் நடைபெற்ற எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதேபோல், தொடக்க நிலை மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) மரகதவல்லி, உதவித் திட்ட அலுவலா் கி. ஜெய்சங்கா், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா், விரிவுரையாளா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் எழுத்தறிவு மதிப்பீட்டுத் தோ்வு மையங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.