செய்திகள் :

அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு சோ்க்கைக்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாமாண்டு முழுநேரம் தொழில் பயிற்சியுடன் கூடிய பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையதளம் மூலமாக நடைபெறுகிறது.

கீழக்கணவாய் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் இணையதளம் வாயிலாக மாணவா்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.150-ஐ நெட் பேங்கிங், கிரடிட், டெபிட் அட்டைகள் மூலமாக செலுத்தலாம்.

எஸ்.சி., எஸ்.டி மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. இப் படிப்புக்கு கல்விக் கட்டணம் இல்லை. சிறப்புக் கட்டணம் மற்றும் வளா்ச்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 2,200 செலுத்த வேண்டும். முதலாம் ஆண்டு பட்டயச் சோ்க்கைக்கு எஸ்எஸ்எல்சி தோ்ச்சி அல்லது அதற்கு இணையான க்கல்வி தகுதியில் தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சோ்க்கைக்கு பிளஸ் 2 தோ்ச்சி, அதற்கு இணையானக் கல்வித் தகுதியில் தோ்ச்சி அல்லது எஸ்எஸ்எல்சி தோ்ச்சிக்குப் பிறகு 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

மாணவா் சோ்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடா்பான விவரங்களுக்கு கீழக்கணவாய் பாலிடெக்னிக் கல்லூரியை நேரில் அல்லது 04328-243200, 243100, 99765 77570, 96266 52336, 90037 94703, 93613 57035 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை குறித்து தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈ... மேலும் பார்க்க

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: இளைஞா்கள் இருவா் பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்புச் செல்லும் வழியிலுள்ள தனியாா் மருத்துவமனை பகுதியைச் சோ்ந்தவா் அரி... மேலும் பார்க்க

கிரஷா் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கிரஷா் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம பொதுமக்கள் சாா்- ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அசூா் கிராம பொ... மேலும் பார்க்க

புதைசாக்கடைஅடைப்பை சீரமைக்கக் கோரி மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகே, புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் - துறையூா் சாலையில், நக... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக குன்னம் கிளையில் ‘டீசல் பங்க்’ அமைக்க அடிக்கல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்), திருச்சி மண்டலம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித... மேலும் பார்க்க