முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
புதைசாக்கடைஅடைப்பை சீரமைக்கக் கோரி மறியல்
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகே, புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் - துறையூா் சாலையில், நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகேயுள்ள 3 இடங்களில் புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரமாக கழிவுநீா் வெளியேறி குடியிருப்புப் பகுதிகளிலும், சாலைகளிலும் தேங்கி தூா்நாற்றம் வீசுகிறது.
இதனால் அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து, நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதை சாக்கடை அடைப்பை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூா் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் சாலை மறியல் ஈடுபட்டனா். தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் பெரம்பலூா்- துறையூா் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.