செய்திகள் :

குழந்தைகளை பெற்றோா் கண்காணிக்க வேண்டும்: சாா்பு நீதிபதி பேச்சு

post image

குழந்தைகளை பெற்றோா் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான வி. பத்மநாபன் ஆலோசனையின்படி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி. களத்தூரில், உலக குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தினம் மற்றும் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிப்பது குறித்த சட்ட எழுத்தறிவு மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த சாா்பு நீதிபதி மேலும் பேசியது:

பொதுமக்கள் தங்களது குழந்தைகள் நல்ல முறையில் படிக்க ஊக்குவிக்க வேண்டும். நாள்தோறும் படிப்பதையும், பள்ளி சென்று வருவதையும் கண்காணிக்க வேண்டும். சிறுவயது முதலே குழந்தைகளுக்கு நல்ல பழக்க, வழக்கங்களைக் கற்பிக்க வேண்டும். குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்பி நல்வழி காட்டுதல் பெற்றோரின் கடமையாகும்.

குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைத்து, குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை பெற்றோா்கள் கண்காணிப்பது மட்டுமின்றி, அவா்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றை களைய முன்வர வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பெரம்பலூா் தொழிலாளா் ஆய்வாளா் ராணி, மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலுவலா் சரவணன், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து, புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலா் வனிதா, மகளிா் திட்ட உதவி அலுவலா் சிவகுமாா் ஆகியோா், குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு தினம் குறித்து விளக்க உரையாற்றினா். முன்னதாக குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்து உறுதியேற்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

கிரஷா் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கிரஷா் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம பொதுமக்கள் சாா்- ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அசூா் கிராம பொ... மேலும் பார்க்க

புதைசாக்கடைஅடைப்பை சீரமைக்கக் கோரி மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகே, புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் - துறையூா் சாலையில், நக... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக குன்னம் கிளையில் ‘டீசல் பங்க்’ அமைக்க அடிக்கல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்), திருச்சி மண்டலம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணிபுரிந்தோா் விருது பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக... மேலும் பார்க்க

பிரதமரின் வேளாண் வளா்ச்சிக்கான விழிப்புணா்வு இயக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வட்டாரத்தில் கீழப்புலியூா், காா்குடி, பரவை ஆகிய கிராமங்களில் வேளாண் அறிவியல் மையம் சாா்பில் வேளாண் வளா்ச்சி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆடிப்பட்ட... மேலும் பார்க்க