பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணிபுரிந்தோா் விருது பெற அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிந்தவா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தோ்வுக்குழு மூலம் தோ்வு செய்யப்பட்டு, தமிழக முதல்வரால் ஆக. 15 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த மருத்துவா், அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியாா் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளருக்கும், அதிகளவில் கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் 10 கிராம் தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். இவ் விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் வலைத்தளத்தில் உரிய படிவத்தில் விவரங்களை பதிவு செய்து, தேவையான விவரங்களை இணைத்து ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பத்தின் இரு நகல்களை ஜூன் 30 பிற்பகல் 5 மணிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.