தஞ்சாவூருக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று வருகை: கல்லணையிலிருந்து தண்ணீரை திறந...
இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்
முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மருத்துவமனை மாணவர்கள் உள்பட விமானத்தில் பயணித்தவர்களில் (241+1) ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பலியாகினர். பலி எண்ணிக்கை இன்றுடன் (ஜூன்.14) 270-ஐ நெருங்கியுள்ளது.
ஏர் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பலரும் சமூக வலைதளத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் டேவிட் வார்னர் கூறியதை சர்ச்சையாகி வருகிறது.
ஏர் இந்தியாவில் பயணிக்கமாட்டேன் - வார்னர் முடிவு
சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவினைப் பகிர்ந்த டேவிட் வார்னர், “இனிமேல் நான் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
டேவிட் வார்னர் பகிர்ந்த பதிவில் என்ன இருந்தது?
நான், ஏர் இந்தியாவின் முன்னாள் விமான குழுவினைச் சேர்ந்தவன். நான் இதில்தான் வழக்கமாகப் பயணிப்பேன். நீண்ட காலமாகவே இந்த ஏர் இந்தியா பிரச்னையில் இருக்கிறது. நிஜமாகவே பல ஆண்டுகள்.
பயணிகள், விமானிகள், என்ஜினியர்கள் என அனைவருமே இதை லாக் புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால், இந்த நிறுவனம் தனது மதிப்புமிக்க காட்விக் செக்டார் பகுதிகளில் இதற்கு மாற்றாக எந்த விமானத்தையும் வைக்கவில்லை. அதனால்தான், நாம் இந்த விமானத்திலேயே பயணிக்க வேண்டியுள்ளது எனக் கூறப்படிருந்தது.