செய்திகள் :

இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

post image

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மருத்துவமனை மாணவர்கள் உள்பட விமானத்தில் பயணித்தவர்களில் (241+1) ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பலியாகினர். பலி எண்ணிக்கை இன்றுடன் (ஜூன்.14) 270-ஐ நெருங்கியுள்ளது.

ஏர் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பலரும் சமூக வலைதளத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் டேவிட் வார்னர் கூறியதை சர்ச்சையாகி வருகிறது.

ஏர் இந்தியாவில் பயணிக்கமாட்டேன் - வார்னர் முடிவு

சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவினைப் பகிர்ந்த டேவிட் வார்னர், “இனிமேல் நான் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

டேவிட் வார்னர் பகிர்ந்த பதிவில் என்ன இருந்தது?

நான், ஏர் இந்தியாவின் முன்னாள் விமான குழுவினைச் சேர்ந்தவன். நான் இதில்தான் வழக்கமாகப் பயணிப்பேன். நீண்ட காலமாகவே இந்த ஏர் இந்தியா பிரச்னையில் இருக்கிறது. நிஜமாகவே பல ஆண்டுகள்.

பயணிகள், விமானிகள், என்ஜினியர்கள் என அனைவருமே இதை லாக் புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால், இந்த நிறுவனம் தனது மதிப்புமிக்க காட்விக் செக்டார் பகுதிகளில் இதற்கு மாற்றாக எந்த விமானத்தையும் வைக்கவில்லை. அதனால்தான், நாம் இந்த விமானத்திலேயே பயணிக்க வேண்டியுள்ளது எனக் கூறப்படிருந்தது.

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க

கேரளத்தில் மீண்டும் மழை-வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவுமுதல் சூறைக் காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. கடல் கொந்தளிப்பால், கடலோர கிராமங்களில் த... மேலும் பார்க்க

சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் 13-ஆவது முறையாக கருத்து: பிரதமருக்கு காங்கிரஸ் கேள்வி

அகமதாபாத் விமான விபத்து சோகத்தில் நாடு இருக்கும்போதுகூட, வா்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை சாத்தியப்படுத்தியதாக 13-ஆவது முறையாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து தெரிவ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்றுமுதல் 3 நாடுகள் பயணம்: கனடாவில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்!

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமைமுதல் (ஜூன் 15) ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். கனடா பயணத்தில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் ... மேலும் பார்க்க