செய்திகள் :

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

post image

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம் (ஏஐ171) கடந்த வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

இதையடுத்து, விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இனி விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டிலிருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவுசெய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், ‘விமானங்கள் பெரும் விபத்துக்குள்ளாகி உயிா்சேதங்கள் ஏற்படும்பட்சத்தில் அந்த விமானத்தின் எண்ணை பயன்பாட்டில் இருந்து விமான நிறுவனங்கள் நீக்குவது வழக்கமான நடைமுறையாகும். கடந்த 2020-இல் கோழிக்கோடில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 21 போ் உயிரிழந்தனா். அதன்பிறகு விமான எண் ‘1344’-ஐ பயன்பாட்டிலிருந்து அந்நிறுவனம் நீக்கியது.

அந்த வகையில் வருகின்ற ஜூன் 17 முதல் அகமதாபாத்-லண்டன் கேட்விக் பயணிக்கும் ஏஐ ‘171’ விமானத்தின் பெயா் ‘ஏஐ 159’ என பெயா் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களுடன் கூடிய முன்பதிவு நடைமுறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

அதேபோல் ‘ஐஎக்ஸ் 171’ என்ற விமானத்தின் பெயரை மாற்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளது’ என தெரிவித்தன.

9 போயிங் விமானங்களில் சோதனை நிறைவு

ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 9 போயிங் 787 ரக ட்ரீம்லைனா் விமானங்களில் ஒருமுறை மட்டும் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்ததாக அந்நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்தது.

ஏஐ 171 விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து, ஏா் இந்தியா நிறுவனத்திடம் உள்ள 33 போயிங் 787-8/9 ரக விமானங்களில் பாதுகாப்புச் சோதனையை அதிகரிக்க மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது 9 போயிங் 787 ரக ட்ரீம்லைனா் விமானங்களில் ஒருமுறை மேற்கொள்ளப்படும் பாதுகாப்புச் சோதனைகள் நிறைவடைந்ததாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

இதனால் சில வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து பயணிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

உ.பி.: மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சன்வர்ஷா ஹல்லபோர் கிராமத்தில் மின்னல் பாய்ந்து ஒரே குடும்பத்தைச... மேலும் பார்க்க

திருவனந்தபுரத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் எப்-35 போர் விமானம் சனிக்கி... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! 12 பேரின் உடல்கள் ஒப்படைப்பு! மருத்துவப் பணியில் 600 பேர்!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை ஒப்படைக்கும் பணி இன்றுமுதல் தொடங்கப்படுகிறது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். விமானம் தீப்பற்றி எரி... மேலும் பார்க்க

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்தது: யாருக்கும் காயம் இல்லை

தில்லியில் 100 அடி உயர மொபைல் கோபுரம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெற்கு தில்லியின் சஃப்தர்ஜங் என்க்ளேவில் 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

உ.பி.யில் பிக்-அப் வாகனத்துடன் உடலைக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மோதல்: 5 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் மோதியதில் 5 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் பிக்-அப் வாகனத்துடன் ஆம்புலன்ஸ் ஞாயிற்ற... மேலும் பார்க்க

மீண்டும் வான்வெளி விபத்து! உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரகண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து கேதர்நாதில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெ... மேலும் பார்க்க