செய்திகள் :

மீண்டும் வான்வெளி விபத்து! உத்தரகண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி!

post image

உத்தரகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் குப்தகாசியில் இருந்து கேதர்நாதில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்த ஆர்யன் ஏவியேஷன் ஹெலிகாப்டர், கௌரிகுன்ட் - சோன்பிரயாக் காட்டுப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மோசமான வானிலை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். இந்த ஹெலிகாப்டரில் பயணித்த விமானி, குழந்தை உள்பட 7 பேரும் பலியாகினர்.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்துள்ளனர். இந்த விபத்துக்கு அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில், ஜூன் 12 ஆம் தேதியில் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 270-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது இந்த துரதிருஷ்டமான சம்பவம் மேலும் கவலை அளிக்கிறது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

கொல்கத்தா: கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. கொல்கத்தா விமான நிலையத்திலிர... மேலும் பார்க்க

புணேவில் ஆற்றுப்பாலம் உடைந்து விபத்து: 6 பேர் பலி, பலர் மாயம்

புணேவில் இந்திரயணி ஆற்றின் குறுக்கே இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதால், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ம... மேலும் பார்க்க

வயநாடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்னதாக கடந்த மே 24-ஆம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ளது. கேரளத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், காசா்கோடு, கண்ணூா்... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியில் நாளும் பயங்கரவாத தாக்குதல்: அமித் ஷா

காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் நாள்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஜூன் 15) தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் மட்டுமின்றி ஜெய்ப்பூர், அகமதாபாத், கோவை, தில்லி என... மேலும் பார்க்க

விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது

அகமதாபாத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூபானியி... மேலும் பார்க்க

இயல்பு நிலைக்குத் திரும்பும் பஹல்காம்! பக்ரீத் விடுமுறையில் பெருகிய சுற்றுலா வணிகம்!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பஹல்காம் சுற்றுலாத் தலமானது இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. பக்ரீத் விடுமுறையையொட்டி உள்ளூர் வாசிகள் மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபிலிருந்து ஏ... மேலும் பார்க்க