செய்திகள் :

அமெரிக்க ராணுவத்தின் ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் தலைமை தளபதிக்கு அழைப்பு?

post image

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவப் படைகளின் 250-ஆவது ஆண்டு விழாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அமெரிக்கா சென்று அங்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 79-ஆவது பிறந்தநாளில் நடைபெற்ற அமெரிக்க ராணுவப் படைகளின் 250-ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்று பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், இந்த செய்தியை வெள்ளை மாளிகை அதிகாரிகள் நிராகரித்தனர்.இது வெறும் புரளி என்றும் அவர்கள் கூறினர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுகு இடையே ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளுக்குப்பின் நடைபெற்ற சண்டையில், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அந்நாட்டின் படைகளுக்கு தலைமை தாங்கினார். இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஆசிம் முனீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது.

அமெரிக்காவில் யாரும் மன்னர் இல்லை..! அதிபர் டிரம்ப்புக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!

அமெரிக்காவின் கலிஃபோா்னியா, நியூயாா்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது. வீதிகளில் லட்சக்கணக்கானோா் திரண்டு டிரம்ப்புக்கு எதிரான வாசகங்... மேலும் பார்க்க

ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஆதரவு!

இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள ஈரானுக்கு உறுதியான ஆதரவை அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா். ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியானை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசிய ஷெரீஃப், ஈ... மேலும் பார்க்க

ஈரானின் எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானின் தெற்கு புஷாஹா் மாகாணத்தில் உள்ள 2 முக்கிய எரிவாயு வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்தது. இது ஈரானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறையை குறிவைத்து ... மேலும் பார்க்க

சவூதி: பத்திரிகையாளருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

பயங்கரவாதம் மற்றும் அரசுக்கு துரோகம் இழைத்த குற்றத்துக்காக கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளா் தூக்கிலிடப்பட்டதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்தது. பத்திரிகையாளா் துா்கி அல்-ஜசீருக்கு வழங்கப்ப... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய போலீஸாா் கழுத்தை நெறித்து கைது செய்த இந்திய வம்சாவளி நபா் பலி!

ஆஸ்திரேலியாவில் காவல்துறை அதிகாரியால் கைது முயற்சியின்போது கழுத்து நெறிக்கப்பட்ட 42 வயது இந்திய வம்சாவளி நபா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் உள... மேலும் பார்க்க

இந்திய ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய்! - டஸால்ட் சிஇஓ

இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மையில்லை என்று டஸால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) எரிக் டிராப்பியா் தெரிவித்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ... மேலும் பார்க்க