செய்திகள் :

பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

post image

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வகையில் புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-இன் கீழ், அவா்களுக்கு தடையற்ற சூழலை உருவாக்கும் வகையில் இந்த வரைவு வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

‘போக்குவரத்து அணுகல் வழிகாட்டுதல்’ என்ற தலைப்பிலான இந்த வரைவு வழிகாட்டுதலில், மாற்றுத்திறனாளிகள் பொதுப் போக்குவரத்தில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதுமுதல் பயணம் மேற்கொள்வது வரையிலான முழுமையான அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான வழிகாட்டுதல்கள் எந்தவித விலக்கும் இன்றி கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிகாட்டுதல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் அனைத்து புதிய பேருந்துகளும் தாழ்தள நுழைவாயில், சாய்வுதளம், இருக்கைகளில் பாதுகாப்பு பெல்ட் மற்றும் சக்கர நாற்காலிகளை வைப்பதற்கான இடவசதி ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கெனவே இயங்கிவரும் பிரதம மந்திரி மின்சார பேருந்து சேவை மற்றும் நகரங்களுக்கு இடையேயான வகை-3 ரக பேருந்துகளில் ஏற்கெனவே பரிசோதிக்கப்ட்ட மின்தூக்கி அல்லது சாய்வுதள பாலம் அமைப்புகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். நடக்க சிரமப்படுபவா்களின் வசதிக்காக இந்தப் பேருந்துகளில் குறைந்தபட்சம் நான்கு முன்இருக்கைகளில் இருக்கை பெல்ட் வசதி பொருத்தப்பட வேண்டும்.

மெட்ரோ மற்றும் ரயில் நடைமேடைகளில் உள்ள இடைவெளிகளை ரப்பா் நிரப்பிகள் கொண்டு நிரப்ப வேண்டும். சக்கர நாற்காலிகள் செல்ல வசதியாக ரயிலின் கதவுகள் அகலப்படுத்தப்பட வேண்டும்.

நீண்ட தூர ரயில்களில் குறைந்தபட்சம் ஒரு பெட்டியிலாவது சக்கர நாற்காலி வைப்பதற்கான இடவசதியும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான (வகை ‘ஏ’) கைப்பிடிகளுடன் கூடிய கழிப்பறை வசதியும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

விமான நிலையங்களில் வாகனம் நிறுத்துமிடம் முதல் விமானநிலைய பரிசோதனை, விமானத்தில் ஏறுதல் வரை நகரும் சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிக்கு ஏற்ற இருக்கை வசதிகள் உள்பட மாற்றுத்திறனாளிகள் தடையின்றி பயணம் செய்யும் வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் தங்களின் உதவி உபகரணங்ளை வைப்பதற்கு போதிய இடவசதியை விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மோட்டாா் வாகனச் சட்டம், நகர பேருந்து விவரக்குறிப்புகள் மற்றும் கட்டடக் குறியீடுகளில் தேவையான உடனடி மாற்றங்கள் மேற்கொள்ளவும் வரைவு வழிகாட்டுதலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.70 அடியாக குறைந்துள்ளது. காவிரியில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததன் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 6,501 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து... மேலும் பார்க்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் உள்ள ஒருசில பள்ளிகளுக்கு இன்று(ஜூன் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, திங்கள்கிழமை (ஜூன் 16) முதல் ஜூன் 21-ஆம் தேத... மேலும் பார்க்க

குரூப் 1 முதல்நிலை தோ்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி தலைவா்

குரூப்-1 முதல்நிலை தோ்வு முடிவுகள் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா். மேலும், குரூப் 4 பதவிகளில் காலிப் பணியிடங்கள்... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம்! - பாஜக

கீழடி அகழ்வாய்வை அரசியலுக்கு திமுக பயன்படுத்தக் கூடாது என தமிழக பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி இரவு நேர மெமு ரயில் இன்று ரத்து!

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் இரவு நேர மெமு ரயில் திங்கள்கிழமை (ஜூன் 16), ஜூன் 18 ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படவுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை, துப்பாக்கி கலாசாரம் அதிகரிப்பு! - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி கலாசாரம், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளாா். இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: பாமக வேலூா... மேலும் பார்க்க