செய்திகள் :

போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்தது என்ன?

post image

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்சேர்ந்த கவிதா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார் கவுன்சிலில் 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் தங்கள் பதிவை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு மாற்றுவதற்கு கடந்த 28.04.2022-ல் விண்ணப்பம் செய்திருந்தனர்.

கிருஷ்ணமூர்த்தி-கவிதா

இவர்களின் ஆவணங்களை டெல்லி பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது. மேற்படி விண்ணப்பதாரர்கள் புது டெல்லியில சட்டப்படிப்பு முடித்ததாக சமர்பித்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை கண்டறிய அவர்களின் ஆவணங்களை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்தபோது இருவரின் கல்வி சான்றிதழ்களும் போலியானது என தெரியவந்தது.

போலி ஆவணங்களுடன் பார் கவுன்சிலில் பதிவு செய்ய வந்திருந்த கவிதா, மற்றும் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் கிரிதா செந்தில்குமார் புகார் அளித்தார்.

வழக்கறிஞர் பதிவு

அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்ததில், மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் போலியாக சான்றிதழ்கள் உருவாக்கியது உறுதியானதால் கவிதா, கிருஷ்ணமூர்த்தி இருவரையும் கடந்த 14 ஆம் தேதி பார்கவுன்சில் அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து டெல்லி பார்கவுன்சில் அடையாள அட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

ரூ.2,676 கோடி மெகா மோசடி; 70,000 பேரை ஏமாற்றிய இரண்டு சகோதரர்கள் - மோசடியின் முழு விவரம்

தோலேரா ஸ்மார்ட் சிட்டி திட்டம் எனும் திட்டத்தை மத்திய அரசும் குஜராத் அரசும் இணைந்து செயல்படுத்துகிறது. இது இந்தியாவின் முதல் பசுமை ஸ்மார்ட் சிட்டி எனக் கூறப்படுகிறது. டெல்லியை விட இரண்டு மடங்கு பெரிய ... மேலும் பார்க்க

பெற்றோரை பராமரிக்காத மகன்; கோபத்தில் கொலைசெய்த தந்தை - மணப்பாறை அருகே அதிர்ச்சி சம்பவம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது: 78). இவரது மகன் அண்ணாதுரை (வயது: 55). கந்தசாமி தனது மனைவி பொன்னம்மாளுடன் வசித்து வரும் நிலையில், அதன் அருகில் அண்ணாதுர... மேலும் பார்க்க

கரூர்: இளம்பெண் மரணம்; போராடிய உறவினர்களைத் தகாத வார்த்தையால் திட்டிய ஆய்வாளர்! - பரவும் வீடியோ

கரூர் அடுத்த வெண்ணைமலையைச் சேர்ந்தவர் முருகராஜ். இவருக்கும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெ... மேலும் பார்க்க

பாமக வக்கீல் சுட்டுக் கொலை... குற்றவாளிகளைச் சுட்டுப்பிடித்த போலீஸ் - என்ன நடக்கிறது சோளிங்கரில்?

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சக்கரவர்த்தி (வயது 48). இவர், பா.ம.க இளைஞரணியில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 11-ம் தேதி நள்ள... மேலும் பார்க்க

வீடு, கடைகளுக்கு ரசாயனம் கலந்த பால்; தென்காசியில் 2 ஆண்டுகள் விற்றது அம்பலம்.. பகீர் பின்னணி

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் சாப்பிட்ட கெட்டுப்போன அசைவ உணவால் ஒவ்வாமை ஏற்பட்டதில் நான்கு பேர் பலியான நிலையில், தென்க... மேலும் பார்க்க

``உடல், மன ரீதியான பிரச்னை..'' - கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க துரை தயாநிதி மனு

அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு... மேலும் பார்க்க