செய்திகள் :

திருப்பூர்: நோயாளிக்குச் சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்; வைரல் வீடியோ குறித்து அரசு சொல்வது என்ன?

post image

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களை உள்ளடக்கிய மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை நீடித்து வருவதாகவும், இதன் காரணமாக அந்த மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு காலில் காயத்துடன் சிகிச்சை பெறுவதற்காக மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஒருவருக்கு அங்குத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றும் பெண் ஒருவர் சிகிச்சை அளித்துள்ளார்.

அப்போது, காயம் பட்டவருடன் வந்த ஒருவர் அப்பெண்ணிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லையா எனக் கேட்டபோது, "மருத்துவர் இல்லை. நான் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றுகிறேன். காயங்களுக்கு நான்தான் கட்டுப்போடுவேன்" என்று தெரிவிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

தூய்மைப் பணியாளர்
தூய்மைப் பணியாளர்

இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவத் துறை இணை இயக்குநர் மீரா கூறுகையில், "சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் நோயாளி ஒருவர் வந்ததாகவும், புண்ணுக்குப் போடப்பட்ட கட்டைப் பிரிக்குமாறு கூறியுள்ளார்.

இதனால், தூய்மைப் பணியாளர் கட்டை மட்டும் பிரித்துள்ளார். 24 மணி நேரமும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏழு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஐந்து பேர் மட்டுமே தற்பொழுது பணியாற்றி வருகின்றனர். இரண்டு இடங்கள் காலியாக உள்ளன" என்று கூறியுள்ளார்.

எனினும் தூய்மைப் பணியாளரை வைத்து கட்டைப் பிரிக்க வைத்த சம்பவம் குறித்து அன்று பணியிலிருந்த மருத்துவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” - கே.என் நேரு

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க

"திருமா அண்ணன் எப்போ மீசையை முறுக்கிப் பேசப் போகிறார்?" - திமுக கூட்டணி குறித்து அண்ணாமலை கேள்வி

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன.அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.திர... மேலும் பார்க்க

``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும் அண்ணாமலை

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்... மேலும் பார்க்க

டயாலிசிஸ் செய்யும் போது மின்தடை; பாதியில் நின்று போன ரத்தம்.. பரிதாபமாக உயிரிழந்த நோயாளி

உத்தரபிரதேச மாநிலம் புல்சந்தா கிராமத்தைச் சேர்ந்த சர்பராஸ் அஹமது (26). இவருக்கு சிறுநீரக நோய் இருந்தது. அதனால் அவருக்கு ரத்தமாற்று சிகிச்சையான டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார். அதன்படி பிஜ்னோரில் உள்ள ம... மேலும் பார்க்க

`குழந்தை பராமரிப்பு விடுப்பு' - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு; உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

ஜார்க்கண்டைச் சேர்ந்த கூடுதல் மாவட்ட நீதிபதியான காஷிகா கோரிய குழந்தை பராமரிப்பு விடுப்பை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, நீதிபதிக்கு 92 நாள்கள... மேலும் பார்க்க