செய்திகள் :

"திருமா அண்ணன் எப்போ மீசையை முறுக்கிப் பேசப் போகிறார்?" - திமுக கூட்டணி குறித்து அண்ணாமலை கேள்வி

post image

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன.

அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.

திருமாவளவன்
திருமாவளவன்

அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர்.

அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், பா.ஜ.க கூட்டணியில் தலைமை அதிகாரத்தைக் கைப்பற்றத் திட்டங்கள் தீட்டுவதாகக் கூட்டணிக்குள்ளேயே சலசலப்புகள் கிளம்பியிருக்கின்றன.

இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், "2026-ல் அமையப்போவது கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். அது பா.ஜ.க ஆட்சி என்றே சொல்வேன். வரும் தேர்தலில் பா.ஜ.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று நினைப்பவன் நான்" என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் கூட்டணி குறித்து, "'பேசவேண்டிய நேரத்தில் மீசையை முறுக்கிப் பேசுவேன்' என்று திருமாவளவன் பேசியிருந்தார்.

தூத்துக்குடியில் பனை மரம் ஏறி கள் இறக்கிய சீமான்.!
தூத்துக்குடியில் பனை மரம் ஏறி கள் இறக்கிய சீமான்.!

இது குறித்துப் பேசியிருக்கும் அண்ணாமலை, "விஜய்யின் த.வெ.க கட்சியானது, மத்தியில் பா.ஜ.க, மாநிலத்தில் தி.மு.க எதிரி என அறிவித்திருக்கிறது. த.வெ.க-வில் இனிதான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைத் தொடங்கப்போகிறது.

கூட்டணி வரும்போதுதான் அந்தந்தக் கட்சியின் கொள்கை பற்றித் தெரிய வரும். பா.ம.க கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் இருக்கிறது.

இப்போதைக்கு தி.மு.க கூட்டணிதான் கொஞ்சம் குளறுபடியில் இருக்கிறது. அண்ணன் திருமாவளவன் அவர்கள் 'பேசவேண்டிய நேரத்தில் மீசையை முறுக்கிப் பேசுவேன்' என்று கூறியிருக்கிறார்.

அவர் எப்போ பேசப்போகிறார் என்பதைப் பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம்" என்று விமர்சித்திருக்கிறார்.

சீமானின் கள் இறக்கும் போராட்டம் குறித்து, "கள் இறக்கும் போராட்டத்திற்கு எங்களின் முழு ஆதரவு இருக்கிறது. தடையை உடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தடையை மீறச் செய்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. சட்டப்படி நின்று தடையை நீக்கப் போராட்டம் செய்வதே எங்களின் நோக்கம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” - கே.என் நேரு

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க

``முருகன் பெயரைக் கேட்டாலே திமுக-வினருக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது!” - சாடும் அண்ணாமலை

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையத்... மேலும் பார்க்க

திருப்பூர்: நோயாளிக்குச் சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்; வைரல் வீடியோ குறித்து அரசு சொல்வது என்ன?

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கிராமப்புறங்களை உள்ளடக்கிய மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை நீடித்த... மேலும் பார்க்க

டயாலிசிஸ் செய்யும் போது மின்தடை; பாதியில் நின்று போன ரத்தம்.. பரிதாபமாக உயிரிழந்த நோயாளி

உத்தரபிரதேச மாநிலம் புல்சந்தா கிராமத்தைச் சேர்ந்த சர்பராஸ் அஹமது (26). இவருக்கு சிறுநீரக நோய் இருந்தது. அதனால் அவருக்கு ரத்தமாற்று சிகிச்சையான டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார். அதன்படி பிஜ்னோரில் உள்ள ம... மேலும் பார்க்க

`குழந்தை பராமரிப்பு விடுப்பு' - உயர் நீதிமன்றம் நிராகரிப்பு; உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

ஜார்க்கண்டைச் சேர்ந்த கூடுதல் மாவட்ட நீதிபதியான காஷிகா கோரிய குழந்தை பராமரிப்பு விடுப்பை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து, நீதிபதிக்கு 92 நாள்கள... மேலும் பார்க்க