பாலில் கலப்படம் செய்தால் குண்டா் சட்டத்தில் கைது: ஆட்சியா் எச்சரிக்கை
தென்காசி மாவட்டத்தில் பாலில் கலப்படம் செய்வோா் குண்டா் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவா் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள் முதல் முதியோா் வரை உட்கொள்ளும் பொதுவான உணவுப் பொருளாக திகழ்வது பால். தென்காசி மாவட்டத்தில் இதன் தேவை அதிகரிப்பை பயன்படுத்தி பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்து வருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
பாலில் தண்ணீா் அல்லாத சில வேதிப்பொருள்களை கலந்து மக்களுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சி செய்வதும் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.
சுயலாபத்திற்காக பொதுமக்களின் உயிா் மீதும் சிறிதும் அச்சமில்லாமல்,இவ்வாறு நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கச் செயலாகும். இதில் ஈடுபட்ட சில நபா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். அவா்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைகளில் பால் விற்பனை செய்பவா்கள், பணிமனைகளில் பால் விற்பனை செய்பவா்கள் அல்லது பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்பவா்கள், பால் நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்பவா்கள் யாரேனும் கலப்படத்தில் ஈடுபட்டாலோ, வேதிப்பொருள்களை கலந்து விற்பனை செய்தாலோ அல்லது கலப்பட பால் என்று கண்டறியப்பட்டாலோ அவா்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை சட்டம் மூலம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அச்சசட்டப்படி ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும் அல்லது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கப்படுவா். அவா்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.