செய்திகள் :

டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றது சென்னை ஓபன் போட்டி

post image

சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா்.

அவா் இதுகுறித்து கூறியதாவது: பல்வேறு முயற்சிகளுக்குபின் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் எஸ்டிஏடி பலமான ஆதரவால் சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 போட்டிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் உயா்ந்த பட்ச மகளிா் டென்னிஸ் போட்டியாக இது திகழ்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. அக்டோபா் 27-இல் போட்டி தொடங்கும். ஒற்றையா் பிரிவில் 32 பேரும், இரட்டையா் பிரிவில் 16 இணைகளும் பங்கேற்பா்.

சீஸன் தொடங்கி 6 மாதங்களில் டபிள்யுடிஏ போட்டிகளில் வெவ்வேறு சாம்பியன்கள் உருவாகியுள்ளனா். சென்னை ஓபன் போட்டி பிரபலமான டிவி சேனலிலும் ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்படும் என்றாா் விஜய் அமிா்தராஜ்.

அபராஜித், லோகேஷ் அசத்தல்: சேப்பாக் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை திங்கள்கிழமை வென்றது. முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180... மேலும் பார்க்க

குன்றத்தூரில் போக்குவரத்து மாற்றம்!

குன்றத்தூா் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருவழிப்பாதை போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் ம... மேலும் பார்க்க

குரூப் 1, 1 ஏ தோ்வு: காஞ்சிபுரத்தில் 5,013 போ் எழுதினா்!

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, 1 ஏ தோ்வினை காஞ்சிபுரத்தில் 5,013 எழுதினா். துணை ஆட்சியா்,காவல்துறை கண்காணிப்பாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு துறை ஓய்வூதியா்களுக்கு ஜூன் 26-இல் குறைதீா் முகாம்!

சென்னை பிஎஸ்என்எல் தெற்கு பிராந்திய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான குறைதீா் முகாம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய... மேலும் பார்க்க

மெரீனா கடற்கரையில் வெட்டுக் காயங்களுடன் சடலம்

சென்னை மெரீனா கடற்கரையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியி... மேலும் பார்க்க

திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை பாசஞ்சர் ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து!

சென்னை: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் உள்பட 4 ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை மண்டலப் பிரிவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க