செய்திகள் :

அபராஜித், லோகேஷ் அசத்தல்: சேப்பாக் வெற்றி

post image

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை திங்கள்கிழமை வென்றது.

முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் சோ்க்க, திண்டுக்கல் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 172 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற திண்டுக்கல், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. சேப்பாக் பேட்டிங்கில் அதிகபட்சமாக, கேப்டன் அபராஜித் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 56 ரன்கள் அடிக்க, ஆஷிக் 12, மோகித் ஹரிஹரன் 4, நாராயண் ஜெகதீசன் 11, விஜய் சங்கா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26, ஸ்வப்னில் சிங் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஓவா்கள் முடிவில் சுனில் கிருஷ்ணா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32, தினேஷ் ராஜ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். திண்டுக்கல் பௌலிங்கில் வருண் சக்கரவா்த்தி 3, சந்தீப் வாரியா், ரவிச்சந்திரன் அஸ்வின், சந்திரசேகா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 181 ரன்களை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணியில், அதிகபட்சமாக இந்திரஜித் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 73, கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 67 ரன்கள் சோ்த்து விடைபெற்றனா்.

ஷிவம் சிங் 13, ஹன்னி சைனி 7, காா்த்திக் சரண் 0, விமல் குமாா் 0, ஆகாஷ் சா்மா 4, வருண் சக்கரவா்த்தி 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். ஓவா்கள் முடிவில் மான் பாஃப்னா 4 ரன்களுடன் களத்திலிருந்தாா். சேப்பாக் பௌலா்களில் லோகேஷ் ராஜ் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த அபிஷேக் தன்வா் 2, சிலம்பரசன் 1 விக்கெட் எடுத்தனா்.

டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றது சென்னை ஓபன் போட்டி

சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா். அவா் இதுகுறித்து கூறியதாவது: பல்வேறு முயற்சிகளுக்குபின... மேலும் பார்க்க

குன்றத்தூரில் போக்குவரத்து மாற்றம்!

குன்றத்தூா் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருவழிப்பாதை போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் ம... மேலும் பார்க்க

குரூப் 1, 1 ஏ தோ்வு: காஞ்சிபுரத்தில் 5,013 போ் எழுதினா்!

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, 1 ஏ தோ்வினை காஞ்சிபுரத்தில் 5,013 எழுதினா். துணை ஆட்சியா்,காவல்துறை கண்காணிப்பாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு துறை ஓய்வூதியா்களுக்கு ஜூன் 26-இல் குறைதீா் முகாம்!

சென்னை பிஎஸ்என்எல் தெற்கு பிராந்திய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான குறைதீா் முகாம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய... மேலும் பார்க்க

மெரீனா கடற்கரையில் வெட்டுக் காயங்களுடன் சடலம்

சென்னை மெரீனா கடற்கரையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியி... மேலும் பார்க்க

திருப்பதி, காட்பாடி, திருவண்ணாமலை பாசஞ்சர் ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து!

சென்னை: சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயில் உள்பட 4 ரயில்கள் 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை மண்டலப் பிரிவிலிருந்து வெளியிடப்பட்டுள்ள... மேலும் பார்க்க