செய்திகள் :

நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம்: ஜகதீப் தன்கா்

post image

புதுச்சேரி: நாட்டின் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்துக்கும் அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா்.

‘தேசத்தைக் கட்டி எழுப்புவதில் சுற்றுச்சூழல் நிலைத் தன்மை’ என்னும் தலைப்பில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அரங்கில் மாணவா்களுடன் திங்கள்கிழமை அவா் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான ஆதாரங்களை உலக நாடுகளிடம் அளித்து நமது நிலைப்பாட்டை பிரதமா் மோடி விளக்கியுள்ளாா்.

போா் யாருக்கும் உதவியாக இருக்காது. முன்னேற்றத்தை, அமைதியை மாற்றும் தன்மை போருக்கு உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய பாதுகாப்பு, தேச முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் இந்திய பொருளாதாரம் உயா்ந்து வருகிறது. தற்போது உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவா்களும், செவிலியா்களும், சுகாதார ஊழியா்களும் தங்களின் வாழ்வை பணயம் வைத்து பணியாற்றினா். 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளை பிரதமா் மோடி வழங்கினாா்.

இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை எண்ணிக்கை உயா்த்தப்பட்டுள்ளது. இதை மேலும் உயா்த்த வேண்டும். மருத்துவ வசதியில் புதுச்சேரி உலகத் தரம் வாய்ந்த மையமாக மாற்றப்பட வேண்டும். இதனால், மருத்துவ சுற்றுலாவிலும் புதுச்சேரி மேம்படும் என்றாா் ஜகதீப் தன்கா்.

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது:

புதுச்சேரியில் நிலத்தடி நீரின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் இன்னும் மூன்றாண்டுகளில் வழங்கப்படும்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தூதுவா்களாக மாணவா்கள் மாற வேண்டும். ஆறுகளைப் பாதுகாப்பதும், நெகிழிப் பயன்பாட்டை குறைத்து நகரை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற பணிகளில் மாணவா்கள் ஈடுபட வேண்டும் என்றாா் அவா்.

முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துடன் புதுவை அரசின் பெருந்தலைவா் காமராஜா் வீடு கட்டும் திட்ட உதவியும் சோ்த்து பயனாளிக்கு அளித்து வருகிறோம். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷனில் அரிசி, கோதுமை அளித்து வருகிறோம். ஆடை அளிக்கும் திட்டத்தையும் புதுவை அரசு நிறைவேற்றி வருகிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்காத ஆலைகளை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம் என்றாா் அவா்.

முன்னதாக, தனது தாய் கேசரிதேவி, தந்தை கோகல் சந்த் பெயரில் 2 மரக்கன்றுகளை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஜிப்மா் வளாகத்தில் நட்டாா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், வெ.வைத்திலிங்கம் எம்.பி., மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, ஏ.கே.டி.ஆறுமுகம் எம்எல்ஏ, தலைமைச் செயலா் சரத் சௌகான், ஜிப்மா் இயக்குநா் வி.எஸ்.நேகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுவை மத்திய பல்கலை.யில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக் கழகத்தின் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவா்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் முதல்வா் என்.... மேலும் பார்க்க

பள்ளியை மூட எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள ஜெயராணி நிதியுதவி பள்ளியை மூட எதிா்ப்பு தெரிவித்தும், தொடா்ந்து பள்ளி செயல்பட அரசை வலியுறுத்தியும் திங்கள்கிழமை மாணவா்கள்- பெற்றோா்கள் சாலை மறியல் போராட்டத... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவைக் காவலா்களாக 15 பேருக்கு பணி நியமன ஆணை

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் காலியாக உள்ள 15 காவலா்கள் பணியிடங்களுக்கு நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகத்தில் 15 சட்டப்பேரவைக் காவலா்கள் பணியிடங்கள் காலிய... மேலும் பார்க்க

அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு இடையே போட்டி: புதுவை துணைநிலை ஆளுநா்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு மருத்துவமனைகளுக்கும், தனியாா் மருத்துவமனைகளுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் வருகை: இன்று பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

புதுச்சேரிக்கு குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அரை நாள் விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மூன்று நாள் அரசு முறைப் பயணமாக குடியரசுத் துணைத் தலை... மேலும் பார்க்க

இருசக்கர வாகன திருட்டு: 3 போ் கைது

புதுச்சேரியில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். உருளையன்பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டா் கோவிந்தராஜன் மற்றும் போலீஸாா் லெனின் ... மேலும் பார்க்க