புதுவை சட்டப்பேரவைக் காவலா்களாக 15 பேருக்கு பணி நியமன ஆணை
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் காலியாக உள்ள 15 காவலா்கள் பணியிடங்களுக்கு நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகத்தில் 15 சட்டப்பேரவைக் காவலா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றி வரும் ஊா்க்காவல் படையினா் பணி மூப்பு அடிப்படையில் இப் பணியில் நியமிக்கப்பட்டனா். இதற்கான ஆணையை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா். அப்போது சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.