செய்திகள் :

ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்... நெதன்யாகு கூறுவதென்ன?

post image

ஈரான் மதத் தலைவர் கமேனியைக் கொல்வதுதான் ஒரே தீர்வு என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், மதகுரு அயத்துல்லா கமேனி கொல்லப்படுவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்ததாகக் கூறப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளிக்க மறுத்திருந்த நெதன்யாகு, “எது தேவையோ அது நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “மத்திய கிழக்கில் உள்ள அனைவரையும் பயமுறுத்தும் ஈரானால், அரை நூற்றாண்டு காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சவூதி அரேபியாவில் உள்ள அரம்கோ எண்ணெய் வயல்களில் குண்டுவீசித் தாக்கியுள்ளன. ஈரான் பயங்கரவாதத்தை எல்லா இடங்களிலும் பரப்புகிறது.

நாங்கள் எங்கள் எதிரியை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. உங்கள் எதிரியையும் எதிர்த்துப் போராடுகிறோம். ஈரானின் பயங்கரவாதத்தால், உலகம் அணுசக்தி பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளுகிறது. இதைத் தடுத்து முற்றுப்புள்ளி வைக்க இஸ்ரேல் நினைக்கிறது. தீய சக்திகளை எதிர்த்து நிற்பதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்.

இன்று டெல் அவிவ்... நாளை நியூயார்க்... இதைத் தடுக்க வேண்டும். மேலும், ஈரானின் மதகுரு அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உடனே வெளியேறுக..! - டிரம்ப் எச்சரிக்கை

அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கீவ் நகரத்தின் மீது இன்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூ... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

சௌதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வாலீத் விபத்தில் சிக்கி சுமார் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் கண் விழித்துப் பார்த்து, தனது குடும்பத்தாருடன் இணைந்ததாக விடியோக்கள்... மேலும் பார்க்க

உச்சகட்டத்தை எட்டும் இஸ்ரேல் - ஈரான் மோதல்! செய்திகள் நேரலை...

தெஹ்ரானைவிட்டு வெளியேறுக!ஈரான் தலைநகர் தெஹ்ரானைவிட்டு அனைவரும் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பதற்றமாக சூழல் நிலவுகிறது.பங்கர் - பஸ்டர் குண்டுகள் மூலம் தெஹ்... மேலும் பார்க்க

தெஹ்ரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், தெஹ்ரானிலுள்ள இந்தியவர்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் தொ... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்டமா?

இஸ்ரேல் - ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாதியிலேயே நாடு திரும்பியுள்ளார்.ஏற்கெனவே ஈரான் தலைநகர் டெஹ்ரானை விட்டு அ... மேலும் பார்க்க

டெஹ்ரானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 போர் விமானங்கள் தகர்ப்பு

ஈரான் தலைநகர் டெஹ்ரான் விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அமெரிக்க தயாரிப்பு எஃப்-14 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் தகர்க்கப்பட்டன.ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு விமான நிலையத்தில... மேலும் பார்க்க