செய்திகள் :

அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!

post image

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கீவ் நகரத்தின் மீது இன்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 14 பேர் கொல்லப்பட்டதுடன், 44 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கீவ் நகரத்தின் ராணுவ நிர்வாகத் தலைவர் தைமுர் தகாசென்கோ கூறியதாவது:

“கீவ்விலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் மீதான ரஷியாவின் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணியில், மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நள்ளிரவு முதல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் கீவ் நகரத்தின் ஏராளமான கட்டடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் உள் துறை அமைச்சர் கூறுகையில், ரஷியாவின் தாக்குதல்களில் படுகாயமடைந்த அமெரிக்கர் ஒருவர் தற்போது பலியாகியுள்ளதாகவும், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

இத்துடன், ஸ்விடோஷைன்ஸ்கி மற்றும் சோலோமியன்ஸ்கி ஆகிய மாவட்டங்களில், ரஷிய டிரோன்களை உக்ரைன் விமானப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால், உண்டான தீயினால் ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

எத்தியோப்பியா தலைநகர் - ஹைதராபாத் விமான சேவை துவக்கம்!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா மற்றும் தெலங்கானாவின் ஹைதரபாத் ஆகிய இருநகரங்களுக்கு இடையில் சர்வதேச விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்திலுள்ள ராஜிவ் காந்தி பன்னாட்டு விமான ... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொலை?

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப... மேலும் பார்க்க

இஸ்ரேலின் உளவு அமைப்பு தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் - ஈரான் சண்டை ஐந்தாவது நாளை எட்டியிருக்கும் நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸ்ஸாத் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேலிய ஊடகம் வெளி... மேலும் பார்க்க

தெஹ்ரானிலிருந்து அர்மேனியா வந்த 110 இந்திய மாணவர்கள்! தூதரகம் நடவடிக்கை!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், தெஹ்ரானிலிருந்து இந்திய மாணவர்கள் ஏராளமானோர் வெளியேறியதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆபரேஷன் ரைசிங் லயம் என்ற பெய... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! துபை அரசு

கோடை காலத்தையொட்டி, துபை அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை நாளாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், வேலை நேரத்தையும் குறைத்து துபை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்தாண்டு கோடை... மேலும் பார்க்க

20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

சௌதி அரேபியாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் அல்-வாலீத் விபத்தில் சிக்கி சுமார் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில், அவர் கண் விழித்துப் பார்த்து, தனது குடும்பத்தாருடன் இணைந்ததாக விடியோக்கள்... மேலும் பார்க்க