செய்திகள் :

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொலை?

post image

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் மற்றொரு தலைமைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று, ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல்களுக்கு, பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இஸ்ரேல் அதன் விமானப் படைகள் மற்றும் முன்கூட்டியே அந்நாட்டினுள் கடத்தப்பட்ட ராணுவ ட்ரோன்கள் மூலமாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தத் தாக்குதல்களில் ஈரானின் சில முக்கிய ராணுவ தளபதிகளும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஈரானின் கட்டாம் அல் - அன்பியா மத்திய தலைமையகத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஜெனரல் அலி ஷாத்மானி என்பவரைக் கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து ஈரானின் தரப்பில் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்னர் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி ஜெனரல். கோலம்அலி ரஷித் என்பவர் கொல்லப்பட்டார்.

அதன் பின்னர், அவரது பொறுப்புகள் அனைத்தும் ஜெனரல். அலி ஷாத்மானியிடன் ஈரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமேனி ஒப்படைத்து அவரைப் பதவி உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தெஹ்ரானிலிருந்து அர்மேனியா வந்த 110 இந்திய மாணவர்கள்! தூதரகம் நடவடிக்கை!

ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம்!

ரஷியாவுக்கு உதவும் வகையில் 6 ஆயிரம் ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் சண்டையால், தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச சந்தையில், எரிபொருள் தேவைக்கு அதிகமாகவே இருப... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் செயலியிலும் இனிமேல் விளம்பரங்கள் வரும்! பயனர்களுக்கு இம்சையாகுமா?

வாட்ஸ்ஆப் செயலியில் முதல்முறையாக விளம்பரங்கள் வரவுள்ளன. ஆனால், இந்த விளம்பரங்களால் வழக்கமான உரையாடல்களுக்கு இடையூறு ஏதும் இருக்காது. அந்த வகையில், விளம்பரங்களுக்கான பக்கம் வாட்ஸ்ஆப்பில் வடிவமைக்கப்பட்... மேலும் பார்க்க

சீனாவில் பட்டாசு ஆலை விபத்து! 9 பேர் பலி.. 26 பேர் படுகாயம்!

சீனாவின் மத்தியப் பகுதியிலுள்ள, பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட மிகப் பெரியளவிலான வெடி விபத்தால் 9 பேர் பலியாகியுள்ளனர். ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில், இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஜூலை 5ஆம் தேதி காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்கா கணிப்பு

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கி கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் ரையோ தத்சுகி என்பவர், தற்போது புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார். கல... மேலும் பார்க்க

எத்தியோப்பியா தலைநகர் - ஹைதராபாத் விமான சேவை துவக்கம்!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா மற்றும் தெலங்கானாவின் ஹைதரபாத் ஆகிய இருநகரங்களுக்கு இடையில் சர்வதேச விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்திலுள்ள ராஜிவ் காந்தி பன்னாட்டு விமான ... மேலும் பார்க்க