செய்திகள் :

விவசாயிகள் வருவாயைப் பெருக்க நடவடிக்கை: வேளாண் வணிகத்தை உலகளவில் ஊக்குவிக்க அரசுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

post image

தமிழ்நாடு வேளாண் வணிகம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி கழகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று(ஜூன் 17) ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் அதுல் ஆனந்த், சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, சென்னை ஐஐடி மேலாண்மை படிப்புகள் துறைசார் பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இதன்மூலம், புத்தாக்கத்துடன் உலகளாவிய போட்டியை சமாளிக்கும் விதத்தில் தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளை மேலும் ஊக்கப்படுத்த வழிவகை செய்யப்பட உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இதன் முக்கிய அம்சங்களாக:

  • வேளாண் வணிகம் குறித்து ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்த்தல்

  • பயிர் விளைச்சலில் நஷ்டம் ஏற்படுவதை தவிர்த்தல், விநியோகச் சங்கிலியை ஒழுங்குமுறைப்படுத்துதல்

  • சந்தை அணுகுமுறைகளை மேம்படுத்துதல். அதேபோல, ஏற்றுமதி திறனையும் மேம்படுத்துதல்

  • வேளாண் பொருள்களை விளம்பரப்படுத்துதல், அவற்றின் பேக்கேஜ் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல செயல்முறைகள் கடைப்பிடிக்கப்படும்.

இவற்றை இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக தொழில்முனைவோர்களையும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும் ஊக்கப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராஜித், லோகேஷ் அசத்தல்: சேப்பாக் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை திங்கள்கிழமை வென்றது. முதலில் சேப்பாக் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 180... மேலும் பார்க்க

டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றது சென்னை ஓபன் போட்டி

சென்னை ஓபன் 250 டென்னிஸ் போட்டி டபிள்யுடிஏ டூா் அட்டவணையில் இடம் பெற்றுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவா் விஜய் அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா். அவா் இதுகுறித்து கூறியதாவது: பல்வேறு முயற்சிகளுக்குபின... மேலும் பார்க்க

குன்றத்தூரில் போக்குவரத்து மாற்றம்!

குன்றத்தூா் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருவழிப்பாதை போக்குவரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தாம்பரம் ம... மேலும் பார்க்க

குரூப் 1, 1 ஏ தோ்வு: காஞ்சிபுரத்தில் 5,013 போ் எழுதினா்!

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் குரூப் 1, 1 ஏ தோ்வினை காஞ்சிபுரத்தில் 5,013 எழுதினா். துணை ஆட்சியா்,காவல்துறை கண்காணிப்பாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான எழுத்து தோ்வு தமிழகம் முழுவ... மேலும் பார்க்க

தொலைத்தொடா்பு துறை ஓய்வூதியா்களுக்கு ஜூன் 26-இல் குறைதீா் முகாம்!

சென்னை பிஎஸ்என்எல் தெற்கு பிராந்திய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள், அவா்களது குடும்பத்தினருக்கான குறைதீா் முகாம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய... மேலும் பார்க்க

மெரீனா கடற்கரையில் வெட்டுக் காயங்களுடன் சடலம்

சென்னை மெரீனா கடற்கரையில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா். சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியி... மேலும் பார்க்க