அரக்கோணத்தில் சிற்றுந்துகள் சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
விவசாயிகள் வருவாயைப் பெருக்க நடவடிக்கை: வேளாண் வணிகத்தை உலகளவில் ஊக்குவிக்க அரசுடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு வேளாண் வணிகம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி கழகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று(ஜூன் 17) ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் அதுல் ஆனந்த், சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, சென்னை ஐஐடி மேலாண்மை படிப்புகள் துறைசார் பேராசிரியர்கள் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இதன்மூலம், புத்தாக்கத்துடன் உலகளாவிய போட்டியை சமாளிக்கும் விதத்தில் தமிழ்நாட்டின் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறைகளை மேலும் ஊக்கப்படுத்த வழிவகை செய்யப்பட உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இதன் முக்கிய அம்சங்களாக:
வேளாண் வணிகம் குறித்து ஊரக இளைஞர்களுக்கு திறன் வளர்த்தல்
பயிர் விளைச்சலில் நஷ்டம் ஏற்படுவதை தவிர்த்தல், விநியோகச் சங்கிலியை ஒழுங்குமுறைப்படுத்துதல்
சந்தை அணுகுமுறைகளை மேம்படுத்துதல். அதேபோல, ஏற்றுமதி திறனையும் மேம்படுத்துதல்
வேளாண் பொருள்களை விளம்பரப்படுத்துதல், அவற்றின் பேக்கேஜ் நடவடிக்கைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல செயல்முறைகள் கடைப்பிடிக்கப்படும்.
இவற்றை இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக தொழில்முனைவோர்களையும், விவசாயிகளின் வருவாயைப் பெருக்குவதையும் ஊக்கப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.