செய்திகள் :

டெஸ்ட் கேப்டன் பொறுப்பை நிராகரித்த பும்ரா..! என்ன நடந்தது?

post image

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை தான் நிராகரித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி விலகியதால் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் தேர்வானார்.

வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாகுவார் எனப் பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் உடனான ஸ்கை ஸ்போர்ட்ஸ் நேர்காணலில் பங்கேற்ற பும்ரா இதற்கு விளக்கமளித்துள்ளார். பும்ரா கூறியதாவது:

ஐபிஎல் தொடரின்போது ரோஹித், கோலி ஓய்வுக்கு முன்பாக நான் எனது வேலைப் பழு குறித்தும் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் குறித்தும் பிசிசிஐ-யிடம் பேசினேன்.

எனது முதுகு குறித்து அடிக்கடி எனது அறுவைச் சிகிச்சை நிபணரிடமும் தொடர்ந்து பேசிவருகிறேன். இந்தச் சில காரணங்களினால் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அதனால், தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டாமென பிசிசிஐ-யிடம் தெரிவித்தேன்.

என்னை கேப்டனாக்க பிசிசிஐ விரும்பியது. நான் வேண்டாமென்று கூற காரணம் 5 டெஸ்ட் போட்டிகளில் நான் விளையாடுவேனா தெரியாது.

2,3 போட்டிக்குப் பின்பு பாதியில் வேறு யாராவது அணியை வழிநடத்துவது சரியாக இருக்காது. அணிக்கு அது நல்லதல்ல. நான் எப்போதுமே அணிக்கு முதலிடம் கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம்: ஷர்துல் தாக்குர்

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வோம் என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்னும் இரண்டு நாள்களில் ... மேலும் பார்க்க

சிங்கத்தின் குகைக்குள் செல்லும் ஷுப்மன் கில்; தினேஷ் கார்த்திக் சொல்வதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் இந்திய அணியை வழிநடத்தவுள்ள ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு மரியாதை..! வங்கதேச வீரர்கள் இருவர் சதம்!

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஓய்வுபெறவிருக்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் மரியாதை செலுத்தினர்.இலங்கை காலே திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதல்... மேலும் பார்க்க

மூன்று சூப்பர் ஓவர்கள்; டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை!

டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மூன்று சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டுள்ளன.நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடர் நேற்... மேலும் பார்க்க

அவரது பெயர் டெம்பா..! கேப்டனுக்காக பாடல் பாடிய தெ.ஆ. வீரர்கள்!

டபிள்யூடிசியை வென்ற கேப்டனுக்காக தென்னாப்பிரிக்க வீரர்கள் பாடல் பாடிய விடியோ வைரலாகி வருகிறது. நடப்பு சாம்பியனாக இருந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலக டெஸ் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்கா வென்றது. 27 ஆண்... மேலும் பார்க்க

பிரதமருக்கு அடுத்து செல்வாக்கு மிகுந்த நபர்கள் வரிசையில் ஷுப்மன் கில்: ஜோஸ் பட்லர்

டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் பேசியுள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்... மேலும் பார்க்க