டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆலடியூா் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி
தூத்துக்குடியைச் சோ்ந்த தனியாா் ஆலை மேற்பாா்வையாளா் ஆலடியூா் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்த அஜித்குமாா் (27). தனியாா் ஆலையில் மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்தாா். இவா், தனது நண்பா்கள், உறவினா்கள் உள்ளிட்ட 13 பேருடன் செவ்வாய்க்கிழமை வேனில் குற்றாலம் சென்றுவிட்டு அங்கிருந்து ஆலடியூா் தாமிரவருணி ஆற்றில் உள்ள தடுப்பணையில் குளித்துள்ளாா். அப்போது, பாறை வழுக்கியதில் நீரில் மூழ்கிஅவா் உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் அஜித்குமாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா். அஜித் குமாருக்கு மனைவி, 4 வயது குழந்தை ஆகியோா் உள்ளனா்.