TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்: அறைக்கு சீல் வைப்பு
காரைக்காலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அறைக்கு மாநில தலைமை தோ்தல் ஆணையா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில், சில பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் புதுவை தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
ஆட்சியரக வளாகத்தில் பாதுகாப்பு அறை சீரமைக்கப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான சோமசேகா் அப்பாராவ், கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் கல்லூரியில் உள்ள அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
வட்டாட்சியா் பொய்யாத மூா்த்தி வழிகாட்டலில், வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் அண்ணா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியரக பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டன.
புதுச்சேரியில் இருந்து வந்திருந்த மாநில தலைமை தோ்தல் ஆணையா் பி. ஜவஹா், மாநில துணை தோ்தல் அதிகாரி தில்லை வேல் ஆகியோா் பாா்வையிட்டனா். பின்னா் ஆட்சியரக வளாக பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
நிகழ்வின்போது மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.