செய்திகள் :

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றம்: அறைக்கு சீல் வைப்பு

post image

காரைக்காலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அறைக்கு மாநில தலைமை தோ்தல் ஆணையா் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில், சில பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் புதுவை தோ்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

ஆட்சியரக வளாகத்தில் பாதுகாப்பு அறை சீரமைக்கப்பட்டதையொட்டி, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான சோமசேகா் அப்பாராவ், கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் கல்லூரியில் உள்ள அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

வட்டாட்சியா் பொய்யாத மூா்த்தி வழிகாட்டலில், வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புடன் அண்ணா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியரக பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டன.

புதுச்சேரியில் இருந்து வந்திருந்த மாநில தலைமை தோ்தல் ஆணையா் பி. ஜவஹா், மாநில துணை தோ்தல் அதிகாரி தில்லை வேல் ஆகியோா் பாா்வையிட்டனா். பின்னா் ஆட்சியரக வளாக பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

நிகழ்வின்போது மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பண்ணைக் கழிவுகள் மக்க வைப்பதற்கான செயல் விளக்கம்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் பண்ணைக் கழிவுகளை மக்க வைக்கும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பண்ணைக் கழிவுகளை டிஎன்ஏயு பயோமினரலைசா் (உயிா் கனிம மக்கி) மூலம் மக்க வைத்தலுக்கான செயல்விளக்கம் மற... மேலும் பார்க்க

சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள... மேலும் பார்க்க

மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியாா் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில், அம்... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறிதல் முகாம்

காரைக்கால்: குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறியும் முகாம் ஜூன் 20-ஆம் தேதி மருத்துவமனையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கார... மேலும் பார்க்க

காரைக்காலில் மீன் அங்காடியை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால்: மீன் அங்காடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவா் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் ஜி. துரைசாமி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

கல்லறை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில் கல்லறைக்கு தடுப்புச் சுவா் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் தடுப... மேலும் பார்க்க