Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரக...
கல்லறை மேம்பாட்டுப் பணி தொடக்கம்
காரைக்கால்: காரைக்காலில் கல்லறைக்கு தடுப்புச் சுவா் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் தடுப்புச் சுவா் கட்டுதல், மின் விளக்குகள் அமைத்தல் மற்றும் பிற மேம்பாட்டுப் பணிகளுக்காக சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 23 லட்சத்தை பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், நகராட்சிக்கு ஒதுக்கி தந்தாா்.
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி தரப்பட்ட நிலையில், கல்லறையில் பணிகளை தொடங்கிவைக்கும் பூஜை பேரவை உறுப்பினா் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் பங்குத் தந்தை பி. பால்ராஜ்குமாா், காரைக்கால் நகராட்சி ஆணையா் பி. சத்யா மற்றும் பொறியாளா்கள், காரைக்கால் பங்குப் பேரவை துணை தலைவா் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், செயலாளா்கள் இ.நெல்சன், வின்சென்ட், ஜி.அகஸ்டின், பி.அமலோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இப்பணிகள் 6 மாத காலத்திற்குள் நிறைவடையுமென நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.