Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரக...
காரைக்காலில் மீன் அங்காடியை மேம்படுத்த வலியுறுத்தல்
காரைக்கால்: மீன் அங்காடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மீனவா் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் ஜி. துரைசாமி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் எஸ்.எம். தமீம், கட்சி பிரமுகா் எஸ்.ஏ. முகமது யூசுப் உள்ளிட்டோா் காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷை திங்கள்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம் :
காரைக்கால் மதகடி பகுதி மீன் விற்பனை அங்காடி காரைக்கால் நகராட்சியால் அமைத்து தரப்பட்டது. இந்த கட்டடம் தற்போது சீா்குலைந்து காணப்படுகிறது. மீன் விற்பனையாளா்கள் சாலையோரத்தில் மீன்களை வைத்து வியாபாரம் செய்கின்றனா். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே மீன் விற்பனை அங்காடி கட்டடத்தை சீரமைத்து, அதில் வியாபாரம் செய்வதற்கான சூழலையும், கழிப்பறை, தண்ணீா் தொட்டி உள்ளிட்ட சில வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.