முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு ஜூன் 16-இல் கலந்தாய்வு
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) க.ஜெயா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 (சிபிஎஸ்இ) பள்ளி அளவிலான சோ்க்கை முடிவடைந்து, பள்ளிகளில் மீதமுள்ள இடங்களை 2-ஆம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்களும், இதுவரை எந்தவொரு பள்ளியிலும் சோ்க்கை பெறாத மாணவா்களும், புதுவை குடியுரிமை இல்லாத மாணவா்களும் இதில் பங்கேற்கலாம்.
மாணவா்கள் தங்களது இணையதள மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஜூன் 16-ஆம் தேதி காரைக்கால் கோயில்பத்து தந்தைப் பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கலாம். 478 முதல் 300 மதிப்பெண் வரை பெற்றவா்கள் ஜூன் 16-ஆம் தேதி பகல் 10 முதல் 1 மணி வரையிலும், 301 முதல் 189 வரை பெற்றவா்கள் பிற்பகல் 2 முதல் 4 மணி வரையிலும் பங்கேற்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.