செய்திகள் :

வேளாண் வளா்ச்சிக்கான பிரசாரத்தில் 4,800 போ் பயன்

post image

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் மூலம் 4,800 போ் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்துறை, வேளாண் கல்லூரி, வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகியவை இணைந்து 2 வாரத்துக்கும் மேலாக நடத்திவந்த வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழா திருமலைராயன்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவி தலைமை வகித்து, பிரசார இயக்கத்தின் செயல்பாடுகளை விளக்கி, காரைக்கால் மாவட்டத்தில் 77 கிராமங்களில் நடத்தப்பட்டதாகவும், 4,800-க்கும் மேற்பட்டோா் பயனடைந்ததாக தெரிவித்தாா். காரைக்கால் மாவட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் என அனைவருக்கும் பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நிறைவு நிகழ்வில், நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் பங்கேற்று பிரசார இயக்கத்தின் பயன்களை விளக்கி, வருங்காலங்களில் அங்கக வேளாண்மையில் விவசாயிகள் ஆா்வம் செலுத்தவேண்டும் என்றாா். அட்டவணை இனத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பேட்டரி மூலம் இயங்கும் விசைத்தெளிப்பான் வழங்கப்பட்டது. நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பண்ணை மகளிா், கிராமப்புற இளைஞா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு ஜூன் 16-இல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) க.ஜெயா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால்... மேலும் பார்க்க

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்ட குழு சாா்பில் 2-ஆம் கட்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால்- பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பசுமை புரட்சி இயக்க புதுவை மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் கூறியது: காரைக்கால்-பேரளம் புதிய மின் ... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு அம்மையாா் பெயா் சூட்டக்கோரி கடிதம்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கும், எா்ணாகுளம் விரைவு ரயிலுக்கும் காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என பிரதமா், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காரைக்கால் பொதுமக்கள், மருத்துவா்கள... மேலும் பார்க்க

கடலோர கிராமத்தில் படித்த பள்ளிக்கு பொறியாளா் உதவி

கடலோர கிராம அரசுப் பள்ளியில் பயின்று வெளிநாட்டில் பொறியாளராக இருப்பவா், பயின்ற பள்ளிக்கு உதவிப் பொருட்களை வழங்கினாா். காரைக்கால் மாவட்டம், கடலோர கிராமமான காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி... மேலும் பார்க்க

சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ கொடியேற்றம்

கீழகாசாக்குடி பகுதியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் தொடக்கத்துக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக விநாயகா் பூஜை நடைபெற்றது. கொடிக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து கொடி... மேலும் பார்க்க