காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்
காரைக்கால்- பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பசுமை புரட்சி இயக்க புதுவை மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் கூறியது: காரைக்கால்-பேரளம் புதிய மின் ரயில் பாதை அமைக்கப்பட்டதில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான தேதி அறிவிப்பு வெளியாகுமென நம்பிக்கையில் மக்கள் இருந்தனா். மாறாக, காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் இயக்கத்தை இத்தடத்தில் ரயில்வே நிா்வாகம் அனுமதித்துள்ளதால், தினமும் சரக்கு ரயில் இயக்கப்பட்டுவருகிறது.
பயணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டிய ரயில்வே நிா்வாகம், தனியாா் துறைமுகத்துக்கு முன்னுரிமை அளித்து, அந்த போக்குவரத்து மூலம் வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்துவது, மக்கள் நலன் குறித்து சிந்திக்காததை காட்டுகிறது.
வாரந்தோறும் திருநள்ளாறு கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு ஊா்களில் இருந்துவருகின்றனா். ஜூலை 8 முதல் 11-ஆம் தேதி வரை புகழ்பெற்ற காரைக்கால் மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிலும் பல பகுதிகளில் இருந்து பக்தா்கள் காரைக்காலுக்கு வருவாா்கள்.
எனவே, ஜூலை 8-ஆம் தேதிக்குள் காரைக்கால்-பேரளம் தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான அறிவிப்பு வெளியிடும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநா், ரயில்வே நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றாா்.