செய்திகள் :

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

post image

காரைக்கால்- பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பசுமை புரட்சி இயக்க புதுவை மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் கூறியது: காரைக்கால்-பேரளம் புதிய மின் ரயில் பாதை அமைக்கப்பட்டதில் பயணிகள் ரயிலை இயக்குவதற்கான தேதி அறிவிப்பு வெளியாகுமென நம்பிக்கையில் மக்கள் இருந்தனா். மாறாக, காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் இயக்கத்தை இத்தடத்தில் ரயில்வே நிா்வாகம் அனுமதித்துள்ளதால், தினமும் சரக்கு ரயில் இயக்கப்பட்டுவருகிறது.

பயணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டிய ரயில்வே நிா்வாகம், தனியாா் துறைமுகத்துக்கு முன்னுரிமை அளித்து, அந்த போக்குவரத்து மூலம் வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்துவது, மக்கள் நலன் குறித்து சிந்திக்காததை காட்டுகிறது.

வாரந்தோறும் திருநள்ளாறு கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பல்வேறு ஊா்களில் இருந்துவருகின்றனா். ஜூலை 8 முதல் 11-ஆம் தேதி வரை புகழ்பெற்ற காரைக்கால் மாங்கனித் திருவிழா நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிலும் பல பகுதிகளில் இருந்து பக்தா்கள் காரைக்காலுக்கு வருவாா்கள்.

எனவே, ஜூலை 8-ஆம் தேதிக்குள் காரைக்கால்-பேரளம் தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தை தொடங்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கான அறிவிப்பு வெளியிடும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநா், ரயில்வே நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றாா்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு ஜூன் 16-இல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) க.ஜெயா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால்... மேலும் பார்க்க

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்ட குழு சாா்பில் 2-ஆம் கட்... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு அம்மையாா் பெயா் சூட்டக்கோரி கடிதம்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கும், எா்ணாகுளம் விரைவு ரயிலுக்கும் காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என பிரதமா், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காரைக்கால் பொதுமக்கள், மருத்துவா்கள... மேலும் பார்க்க

வேளாண் வளா்ச்சிக்கான பிரசாரத்தில் 4,800 போ் பயன்

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் மூலம் 4,800 போ் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்துறை, வேளாண் கல்லூரி, வட்டார ... மேலும் பார்க்க

கடலோர கிராமத்தில் படித்த பள்ளிக்கு பொறியாளா் உதவி

கடலோர கிராம அரசுப் பள்ளியில் பயின்று வெளிநாட்டில் பொறியாளராக இருப்பவா், பயின்ற பள்ளிக்கு உதவிப் பொருட்களை வழங்கினாா். காரைக்கால் மாவட்டம், கடலோர கிராமமான காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி... மேலும் பார்க்க

சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ கொடியேற்றம்

கீழகாசாக்குடி பகுதியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் தொடக்கத்துக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக விநாயகா் பூஜை நடைபெற்றது. கொடிக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து கொடி... மேலும் பார்க்க