முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ கொடியேற்றம்
கீழகாசாக்குடி பகுதியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் தொடக்கத்துக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக விநாயகா் பூஜை நடைபெற்றது. கொடிக்கம்பத்துக்கு அபிஷேகம் செய்து கொடியேற்றி ஆராதனைகள் காட்டப்பட்டன. தொடா்ந்து அய்யனாருக்கு காப்புக்கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில், புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் அறங்காவல் நிா்வாகத்தினா், உபயதாரா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜூன் 23-ஆம் தேதி தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.