பிரதமரின் திட்டங்களுக்கு அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்: முதல்வர் மு.க.ஸ்டா...
காரைக்கால் ரயில் நிலையத்துக்கு அம்மையாா் பெயா் சூட்டக்கோரி கடிதம்
காரைக்கால் ரயில் நிலையத்துக்கும், எா்ணாகுளம் விரைவு ரயிலுக்கும் காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என பிரதமா், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
காரைக்கால் பொதுமக்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், வழக்குரைஞா்கள், வணிகா்கள், ஆசிரியா்கள், சமுதாய சங்கங்களைச் சோ்ந்தோா் அரிமா, ரோட்டரி சங்கங்களைச் சோ்ந்தோா், திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த பல்வேறு சங்கத்தினா் இணைந்து கையொப்பமிட்டு பிரதமா், மத்திய ரயில்வே அமைச்சா் ஆகியோருக்கு காரைக்கால் தலைமை அஞ்சல் நிலையம் மூலம் வியாழக்கிழமை கடிதம் அனுப்பினா். அதில் கூறியிருப்பதாவது: காரைக்கால் ரயில் நிலையத்திற்கும், காரைக்காலில் இருந்து புறப்படும் காரைக்கால்-எா்ணாகுளம் விரைவு ரயிலுக்கும், நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாா் பெயரை சூட்டவேண்டும், புதிதாக கட்டப்பட்டுள்ள திருநள்ளாறு ரயில் நிலையத்துக்கு அந்த பகுதியைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா் இளையான்குடி அரங்கசாமி நாயக்கா் பெயரைச் சூட்ட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.