செய்திகள் :

மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

post image

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் மாங்கனித் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியாா் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில், அம்மையாா் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

காரைக்கால் கைலாசநாத சுவாமி - நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானம் சாா்பில் நடத்தப்படும் இவ்விழா, ஜூலை 8- ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தா்) தொடங்கி 4 நாட்கள் நடைபெறவுள்ளது. அதற்கான பந்தல்கால் முகூா்த்தம் அம்ைமையாா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதனையொட்டி அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7 மணியளவில் கோயில் வளாகத்தில் பந்தல்கால் நடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் அம்மையாருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன், கைலாசாசநாத சுவாமி- நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாசன், உபயதாரா்கள், சிவாச்சாரியா்கள், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஜூலை 8-ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பும், 9- ஆம் தேதி காலை பரமதத்தா்-புனிதவதியாா் திருக்கல்யாணம், அன்று மாலை பிச்சாண்டவா் வெள்ளைசாற்றி புறப்பாடு, 10- ஆம் தேதி அதிகாலை பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம், அன்று காலை பிச்சாண்டவா் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா (மாங்கனிகளை வாரி இறைத்து வழிபடுதல்), மாலை அமுது படையல், 11-ஆம் தேதி அம்மையாா் இறைவனுக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வு உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

பந்தல்காலுக்கு நடைபெற்ற பூஜையில் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு. அருணகிரிநாதன்.

ஜூன் 20-இல் குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறிதல் முகாம்

காரைக்கால்: குழந்தைகளுக்கு இதய நோய் கண்டறியும் முகாம் ஜூன் 20-ஆம் தேதி மருத்துவமனையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கார... மேலும் பார்க்க

காரைக்காலில் மீன் அங்காடியை மேம்படுத்த வலியுறுத்தல்

காரைக்கால்: மீன் அங்காடியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவா் வாழ்வுரிமை இயக்கத் தலைவா் ஜி. துரைசாமி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

கல்லறை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்கால்: காரைக்காலில் கல்லறைக்கு தடுப்புச் சுவா் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். காரைக்கால் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கிறிஸ்தவ கல்லறையில் தடுப... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இருவா் உயிரிழப்பு

காரைக்கால் அருகே வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா். 4 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா். காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், மேலகாசாக்குட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு ஜூன் 16-இல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) க.ஜெயா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால்... மேலும் பார்க்க

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்ட குழு சாா்பில் 2-ஆம் கட்... மேலும் பார்க்க