செய்திகள் :

Israel - Iran: "தெஹ்ரானை விட்டு பாதுகாப்பான இடத்துக்கு நகருங்கள்" - இந்திய தூதரகம் எச்சரிக்கை

post image

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பாகில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திருக்க வேண்டும். ஆனால், ஈரான் கையெழுத்திடவில்லை. இது அவமானம். மனித உயிர்கள் வீணாகிறது. அணு ஆயுதத்தை ஈரான் வைத்திருக்க முடியாது. நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன், அனைவரும் உடனடியாக தெஹ்ரானை (ஈரான் தலைநகர்) விட்டு வெளியேற வேண்டும்" எனத் தனது ட்ரூத் (Truth) சமூக வலைதளத்தில் இன்று அதிகாலை 4 மணிக்குப் பதிவிட்டிருந்தார்.

இஸ்ரேல் - ஈரான் மோதல்
Israel - Iran Conflict

இந்த நிலையில், ட்ரம்ப் இவ்வாறு பதிவிட்ட அடுத்த சில மணிநேரங்களிலேயே, தெஹ்ரானிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பான இடத்துக்கு நகருமாறு ஈரானிலுள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.

அந்தப் பதிவில், "தாங்களாகவே தெஹ்ரானிலிருந்து வெளியேறக்கூடிய அனைத்து இந்தியர்கள் மற்றும் பொது தகவல் அதிகாரிகள் (PIO) நகரத்திற்கு வெளியே பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், தெஹ்ரானில் இருக்கும் அதேசமயம் தூதரகத்துடன் தொடர்பில் இல்லாத அனைத்து இந்தியர்களும், உடனடியாக தெஹ்ரானிலுள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தங்களின் இருப்பிடம் மற்றும் தொடர்பு எண்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று இந்திய தூதரகம் தெரிவித்து, தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் என, `+989010144557, +989128109115, +989128109109' இந்த மூன்று எண்களை ஷேர் செய்திருக்கிறது.

``1988-ல் நடந்த விமான விபத்து; போதுமான இழப்பீடு வழங்கவில்லை..'' - 37 ஆண்டுகள் போராடும் குடும்பங்கள்

அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமான விபத்து, ஒரு பெரும் சோக நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த கோர விபத்தில் சனிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து... மேலும் பார்க்க

Madurai AIIMS: `மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்' - வீடியோ வெளியிட்ட மத்திய அரசு

பிரதமர் மோடியால் கடந்த 2019 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள், இரண்டு மக்களவைத் தேர்தல் முடிந்தும் முடிக்கப்படவில்லை.6 ஆண்டுகளுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கிடப்பில் போடப்பட்ட ரவுண்டானா பணி; அச்சத்தில் மக்கள்... கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 60 அடி சாலை, அழகேசபுரம் சாலை, கிருஷ்ணராஜபுரம் சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் டி.எஸ்.ஃஎப் சாலையானது மிகவும் பரபரப்பான பிரதான சாலையாகும். இந்த பிரதான டி.எஸ்.ஃஎப் சாலைய... மேலும் பார்க்க

நமக்குள்ளே...

குழந்தை பெற்றுக்கொள்ளும் இயந்திரங்களாக பெண்களை இந்தச் சமூகம் மாற்றி வைத்திருப்பதில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஆட்சி அதிகார மமதையில், மீண்டும் கற்காலத்துக்கே இந்த அரசியல்வா... மேலும் பார்க்க

"அதிமுக - பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” - கே.என் நேரு

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவி... மேலும் பார்க்க

"திருமா அண்ணன் எப்போ மீசையை முறுக்கிப் பேசப் போகிறார்?" - திமுக கூட்டணி குறித்து அண்ணாமலை கேள்வி

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்து இப்போதே அரசியல் கட்சிகள் கூட்டணிக் கணக்குகளை வகுக்க ஆரம்பித்துவிட்டன.அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள்தான் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டன.திர... மேலும் பார்க்க