செய்திகள் :

ஒடிசா: கூட்டு பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 7 பேர் கைது

post image

ஒடிசா மாநிலத்தில் 'பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அழுக்கானது அல்ல' என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் Raja Parba என்ற விழா கொண்டாடப்படுகிறது மூன்று முதல் நான்கு நாள்வரை கொண்டாடப்படும் இந்தவிழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில், ஒடிசாவின் கஞ்சாமில் உள்ள கடற்கரையில் 20 வயது கல்லூரி மாணவி தன் சக நண்பருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மது அருந்தியிருந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியின் நண்பரிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசி வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அந்த நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, அந்த மாணவியை 10 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை

இது தொடர்பாக பேசிய காவல்துறை, ``விழாவைக் கொண்டாட கடற்கரைக்கு வந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. மூன்று பேரைத் தேடி வருகிறோம். மற்றவர்களைக் கைது செய்துவிட்டோம். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருக்கின்றனர். அனைவரையும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவோம்" எனத் தெரிவித்திருக்கிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் மாநில உள்துறை துறை வெளியிட்டுள்ள குற்றங்கள் குறித்த வெள்ளை அறிக்கையின் படி, 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை ஒடிசாவில் 8% அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

கடலூர்: 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸார்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர... மேலும் பார்க்க

கடலூர்: 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் - ஆபத்தான நிலையில் சிகிச்சை

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி மணிமேகலை (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினம்தோறும் காலை மாலை என இரண்டு வேளைகளும், புலவனூர... மேலும் பார்க்க

கடனுக்காக பெண்ணை மரத்தில் கட்டிவைத்த கொடூரம்; கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு- என்ன நடந்தது?

ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்தது குறித்து முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். சித... மேலும் பார்க்க

`உண்மையாகக் காதலித்தால் உயிரைக்கொடு' காதலை நிரூபிக்க விஷம் குடித்தாரா வாலிபர்? - போலீஸ் விசாரணை

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் அரசின் ஆலோசனை எண்ணிற்கு அழைத்துப் பேசுவது சரியான தீர்வுபீகார் மாநிலத்தில் உள்ள பன்கா மாவட்டத்தில், அமர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்சே மண்ட... மேலும் பார்க்க

இளம்பெண் மாயமான வழக்கு; சாமியார் போட்ட திட்டம்; 8 மாதங்களுக்குப் பின் கொலைகும்பல் சிக்கியது எப்படி?

நெல்லை மாவட்டம், பழவூர் அருகிலுள்ள மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கதுரை. இவரின் மகள் கயல்விழி. இவருக்குத் திருமணமாகி, கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

ஷீரடி: "பிறந்தநாள் கொண்டாடப் பணமில்லை" - விவசாயியைக் கடத்திக் கொன்று, போனை திருடிய மைனர் சிறார்கள்

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி அருகில் உள்ள சஷ்னாலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (42). விவசாயியான இவர் கடந்த 8ம் தேதி அருகில் உள்ள சகோரி என்ற கிராமத்திற்குச் சென்றார்.அங்கிருந்து மாலை நேரத்தில் வீட்டி... மேலும் பார்க்க