Bihar: "வைபவ் அண்ணாவை பின்பற்றுகிறேன்..." - 134 பந்துகளில் 327 ரன்கள் அடித்த சூர...
ஒடிசா: கூட்டு பாலியல் வன்கொடுமை; கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; 7 பேர் கைது
ஒடிசா மாநிலத்தில் 'பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அழுக்கானது அல்ல' என்பதை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் Raja Parba என்ற விழா கொண்டாடப்படுகிறது மூன்று முதல் நான்கு நாள்வரை கொண்டாடப்படும் இந்தவிழாவின் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில், ஒடிசாவின் கஞ்சாமில் உள்ள கடற்கரையில் 20 வயது கல்லூரி மாணவி தன் சக நண்பருடன் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது மது அருந்தியிருந்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியின் நண்பரிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசி வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது அந்த நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, அந்த மாணவியை 10 பேரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

இது தொடர்பாக பேசிய காவல்துறை, ``விழாவைக் கொண்டாட கடற்கரைக்கு வந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. மூன்று பேரைத் தேடி வருகிறோம். மற்றவர்களைக் கைது செய்துவிட்டோம். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருக்கின்றனர். அனைவரையும் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவோம்" எனத் தெரிவித்திருக்கிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் மாநில உள்துறை துறை வெளியிட்டுள்ள குற்றங்கள் குறித்த வெள்ளை அறிக்கையின் படி, 2023 உடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை ஒடிசாவில் 8% அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.