செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறப்பு!

post image

பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களிலுள்ள ஏராளமான பூங்காக்கள் மக்களின் வருகைக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரிலுள்ள ஏராளமான சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. இதனால், சுற்றுலாத் துறையை பெரிதும் சார்ந்திருந்த உள்ளூர்வாசிகளின் இயல்பு வாழ்க்கையானது கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்முவில் 8 மற்றும் காஷ்மீரில் 8 என முதற்கட்டமாக மொத்த 16 பூங்காக்களைத் திறக்க உத்தரவிட்டார்.

பூங்காக்கள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அவர்களை உள்ளூர்வாசிகள் உற்சாகத்தோடு வரவேற்பதாகக் கூறப்படுகிறது.

பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற ஆனந்த்நாக் மாவட்டத்தில், பஹல்காமின் பெதாப் பள்ளத்தாக்கு மற்றும் பஹல்காம் சந்தைக்கு அருகிலுள்ள பூங்காக்கள் உள்ளிட்ட ஏரளமான இடங்களில் இன்று (ஜூன் 17) முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக அங்குள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்துடன், நீண்டகால இடைவெளிக்கு பின்னர் வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளை ஆனந்த்நாக்-ன் வெரிநாக் பூங்காவில் பள்ளிக்குழந்தைகள் வரவேற்றனர்.

முன்னதாக, கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

மேலும் 2 விமானங்கள் இன்று ரத்து: ஏர் இந்தியா

புது தில்லி: தில்லியிலிருந்து பாரீ்ஸ் புறப்படவிருந்த ஏர் இந்தியாவின் ட்ரீம்லைனர் ஏஐ143 விமானம் இன்று(ஜூன் 17) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அகமதாபாத் விமான விபத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து போயிங் ... மேலும் பார்க்க

பிகாரில் புதியதாக 6 விமான நிலையங்கள்! அமைச்சரவை ஒப்புதல்!

பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிகாரில் புதியதாக 6 நகரங்களில் விமான நிலையம் அமைப்பதற்கு, மாநில விமானப் ப... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றிப் பொய் பிரசாரம் செய்யும் காங்கிரஸ்: பாஜக விமர்சனம்

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் பொய்யான மற்றும் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிக்கையை மத்... மேலும் பார்க்க

அகமதாபாத் விபத்து: 144 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

குஜராத்தின் அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி உறுதிப்படுத்தினார். மேலும் பார்க்க

ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

ஹிமாசல பிரதேசத்தின் மண்டியில், பத்ரிகாட் பகுதியில் தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது தனியார் பேருந்து ஜாஹுவிலிருந்து ... மேலும் பார்க்க

விபத்துக்குப் பின் இயக்கப்படவிருந்த அகமதாபாத் - லண்டன் ஏர் இந்தியா விமானம் ரத்து!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா விமானம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் 242 பேருடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன்... மேலும் பார்க்க