செய்திகள் :

ஸ்மார்ட்போன்களில் இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்குமா? அறிமுகமாகிறது போக்கோ எஃப் 7

post image

இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

போக்கோ எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூன் 24ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.

ரியல்மீ ஜிடி 7, ஐகியூ நியோ 10 மற்றும் விவோ டி4 ஆகிய ஸ்மார்ட்போன்களின் கலவையாக போக்கோ எஃப் 7 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போன்களில் போக்கோ எஃப் 7 மகுடம் சூடும் வகையில் அதிக பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஷாவ்மி நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனமான போக்கோ, இந்திய பயனர்களைக் கவரும் வகையில் குறைந்த மற்றும் மத்திய தர விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

அந்தவகையில் புதிதாக போக்கோ எஃப் 7 என்ற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜூன் 24ஆம் தேதி முதல் அறிமுகமாகவுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • பல முன்னணி நிறுவன ஸ்மார்ட்போனின் கலவையாக போக்கோ எஃப் 7 உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய தர ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7,550mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • இதன்மூலம், வழக்கமான பயன்பாட்டில் 2.18 நாள்களுக்கு ஸ்மார்ட்போனில் பேட்டரி திறன் நீடிக்கும் என போக்கோ கூறுகிறது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இதோடு மட்டுமின்றி 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகும் என்றும் போக்கோ குறிப்பிடுகிறது.

  • ஸ்நாப்டிராகன் 8எஸ் 4 ஆம் தலைமுறை புராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 12GB உள் நினைவகம் வழங்கப்பட்டுள்ளது.

  • 6.83 அங்குல அமோலிட் திரையுடன், திரையில் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 120Hz திறனுடன் வருகிறது.

  • பின்பக்கத்தில் 50MP சென்சாருடன் 8MP அல்ட்ரா வைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 20MP செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |ஒன்பிளஸ் நோர்டு 5, நோர்டு சிஇ 5 அறிமுகமாகும் தேதி தெரியுமா?

மருந்து நிறுவனப் பங்குகள் சரிவுடன் முடிவு!

புதுதில்லி: மருந்து மீதான இறக்குமதி மீது அமெரிக்கா வரி விதிக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், மருந்து நிறுவனப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மிகுந்த அழுத... மேலும் பார்க்க

ரூ.4100 கோடி அதிவேக ரயில் ஒப்பந்தத்தை வென்ற சீமென்ஸ்!

புதுதில்லி: இந்தியாவின் முதல் அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமான நேஷனல் ஹை ஸ்பீட் ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூ.4,100 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை சீமென்ஸ் பெற்றுள்ளத... மேலும் பார்க்க

ஒன்பிளஸ் நோர்டு 5, நோர்டு சிஇ 5 அறிமுகமாகும் தேதி தெரியுமா?

ஒன்பிளஸ் நோர்டு 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் அறிவிப்பின்படி, ஜூலை 8ஆம் தேதி இரு ஸ்மார்ட்போன்களும்... மேலும் பார்க்க

இஸ்ரேல்–ஈரான் மோதல்: பங்குச் சந்தை சரிவுடன் முடிவு!

மும்பை: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதல்களைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தது நேற்று பங்குகளை வாங்கியதால், நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தை வெகுவாக உயர்ந... மேலும் பார்க்க

சரிவுடன் வர்த்தமாகும் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச் சந்தை இன்று(செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,869.47 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.53 மணி நிலவரப்படி ச... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி குறைவு! எவ்வளவு?

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரம் புதிய உச்சம் தொட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது.சென்னையில் கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ. 74,560-க்கு விற்... மேலும் பார்க்க