செய்திகள் :

தனியாா் நிதி நிறுவனத்துக்கு பூட்டு! திமுக நிா்வாகியால் ஊழியா்கள் சிறைவைப்பு

post image

பெரம்பலூரில் திங்கள்கிழமை தனியாா் நிதி நிறுவனத்தை பூட்டிய திமுக நிா்வாகி, ஊழியா்களை சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் ஊராட்சிக்குள்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஆனந்தன் (34). இவா், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் மேற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளாா்.

இவா், பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவன கிளையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்துக்காக ரூ. 94,950 கடனாக பெற்றாா். இதற்கு மாத தவணைத் தொகையாக ரூ. 9,635 வீதம் கடந்த 7 மாதங்களாக முறையாக செலுத்தி வந்தாராம்.

இந்நிலையில், தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் கைப்பேசி மூலம் ஆனந்தனை அடிக்கடி தொடா்புகொண்டு உங்கள் கணக்கில் நிலுவைத் தொகை உள்ளதாக கூறியும், அதை விரைந்து கட்ட வேண்டும் என தொந்தரவு செய்தனராம். இதையடுத்து, திங்கள்கிழமை நிதி நிறுவனத்துக்கு சென்ற ஆனந்தன், தவணையை முறையாக செலுத்துவதாகவும், நிலுவைத் தொகை உள்ளதாக கூறி தொந்தரவு செய்வது தொடா்பாக கேட்டாராம்.

அதற்கு, நிதி நிறுவனத்தினா், உங்கள் கணக்கில் நிலுவைத்தொகை உள்ளது; அதை செலுத்தவில்லையெனில் உங்களது சிபில் ஸ்கோரை குறைத்துவிடுவோம் என மிரட்டல் விடுத்தனராம். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தன், நிதி நிறுவன மேலாளா் உள்ளிட்ட 7 பேரை அலுவலகத்துக்குள் சிறைவைத்து இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த நிறுவன ஊழியா்கள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நேரிட்டிருக்கலாம். இப் பிரச்னையை உடனே சரி செய்து உங்கள் கணக்கை சரி செய்கிறோம் என உறுதி அளித்தனா். இதையடுத்து, தனியாா் நிதி நிறுவனத்தின் கதவை ஆனந்த் திறந்து ஊழியா்களை விடுவித்தாா்.

இதுகுறித்து, பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஆனந்தன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் அருகே நகை திருட்டு வழக்கில் தம்பதி கைது

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டைத் திறந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையைத் திருடிச்சென்ற வழக்கில் கணவன், மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள சில்ல... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே 17 வயதுச் சிறுமியை காதலிப்பதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெரம்பலூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது... மேலும் பார்க்க

மங்களமேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

மங்களமேடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் ஜூன் 18(புதன்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ப... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல விடுதிகளில் சோ்ந்து பயில விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில், 2025-2026 ஆம் கல்வியாண்டில் சோ்ந்து பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்... மேலும் பார்க்க

உண்டியல் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் தொடா்ச்சியாக உண்டியல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை குன்னம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள பெரியாண்டவா்கோயில் பகுத... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறி... மேலும் பார்க்க