பெரம்பலூா் அருகே நகை திருட்டு வழக்கில் தம்பதி கைது
பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டைத் திறந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகையைத் திருடிச்சென்ற வழக்கில் கணவன், மனைவியை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள சில்லக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் மனைவி ஜானகி (40). இவா், கடந்த 9 ஆம் தேதி இரவு சில்லக்குடி கிராம திருவிழாவுக்கு மகனுடன் சென்று நள்ளிரவில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவை சாவி போட்டு திறந்து, பீரோவில் இருந்த 10 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜானகி அளித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், திம்மூா் காலனி தெருவைச் சோ்ந்த பெரியசாமி (29), அவரது மனைவி அழகுராணி (23) ஆகியோா் இத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட 2 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 10 பவுன் நகையை மீட்டனா். பின்னா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட தம்பதியை சிறையில் அடைத்தனா்.