செய்திகள் :

தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் மீண்டும் இடமாற்றம்

post image

நமது சிறப்பு நிருபர்

கீழடி அகழ்வாராய்ச்சியின் தொடக்க காலத்தில் முக்கியப் பங்களிப்பை வழங்கியவராகக் கருதப்படும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவை, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்துள்ளது.

தற்போது அமர்நாத் ராமகிருஷ்ணா நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள்கள் தேசிய இயக்கத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இதே பிரிவின் தில்லி அலுவலகத்தில் இருந்து கிரேட்டர் நொய்டா அலுவலகத்துக்கு அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.

அமர்நாத் வகித்து வந்த தொன்மைப் பிரிவு இயக்குநர் பதவி, தொல்லியல் துறை தலைமையகத்தில் அகழ்வாராய்ச்சிப் பிரிவை கவனித்து வரும் ஹெச்.ஏ. நாயக் என்ற அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2015-2017 ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையான பொருள்கள், சுட்ட செங்கற்களால் ஆன கட்டமைப்புகள், பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்டப் பொருள்கள், தங்க ஆபரணங்கள், மனித எலும்புக்கூடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

இவை பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் வகையில் இருப்பதாக கருதப்படுகிறது.

பல கட்டங்களாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்ட வேளையில், அமர்நாத் ராமகிருஷ்ணா கோவா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

பின்னர், 2021-இல் தொல்லியல் துறையின் சென்னை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு மூத்த கண்காணிப்பாளராக அமர்நாத் பணியாற்றினார்.

மூன்று ஆண்டு பணிக் காலத்தை நிறைவு செய்யும் முன்பே 2023-ஆம் ஆண்டில் அமர்நாத் தில்லிக்கு பதவி உயர்வு அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கிருந்து தற்போது மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவரது குழு மேற்கொண்ட அகழாய்வின் இடைக்கால ஆய்வறிக்கை 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளிலும், அவற்றின் இறுதிப்படுத்தப்பட்ட 982 பக்க அறிக்கை 2023, ஜனவரியிலும் தொல்லியல் துறை தலைமையிடம் அளிக்கப்பட்டது. அவற்றைப் பரிசீலித்த தொல்லியல் துறை, அமர்நாத்தின் அறிக்கையை மேலும் அறிவியல்பூர்வ தரவுகளுடன் இணைத்துத் திருத்தி அனுப்புமாறு அண்மையில் கேட்டுக்கொண்டது.

ஆனால், ஏற்கெனவே உரிய தரவுகளுடனும் களத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் உரிய பரிசோதனைகள் அடிப்படையிலும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதால் அதைத் திருத்த வேண்டிய அவசியமில்லை என்று அமர்நாத் ராமகிருஷ்ணா பதிலளித்ததாகத் தெரிகிறது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயா்நீதி... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் ஸ்டாலின்: அமைச்சா் துரைமுருகன்

அரசுக் கல்லூரிகளில் மாணவா்கள் விரும்பி சேரும் நிலையை ஏற்படுத்தியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என மாநில நீா் வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் துரை முருகன் கூறினாா். தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்... மேலும் பார்க்க

பெண்கள் மீதான குற்றங்களுக்கு போதைப் பொருள்களே காரணம்: ஜி.கே.வாசன்

பெண்கள் மீதான குற்றச் செயல்களுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்ந... மேலும் பார்க்க

மாநகரில் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைக்கிறாா். சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென... மேலும் பார்க்க

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்பி சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டாா். சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னரசி (38). இவா், சென்னை ... மேலும் பார்க்க