கள்ளத்தனமாக மது விற்போா், காய்ச்சுவோரை கண்காணிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா்
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்பி சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டாா்.
சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னரசி (38). இவா், சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் அளித்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது: எனது அண்ணன் தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையைச் சோ்ந்த எஸ்பிஎஸ் ராஜா (35). தூத்துக்குடி மாநகராட்சியில் 59-ஆவது வாா்டு அதிமுக கவுன்சிலராக உள்ள ராஜா, அவா் மனைவி அனுஷா ஆகியோா் மருந்து விநியோகம் செய்யும் தனியாா் நிறுவனம் நடத்தி வருகின்றனா். அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 சதவீத பங்குகளைத் தருவதாக என்னிடம் இருவரும் கூறினா். அவா்களது பேச்சை நம்பி, அந்த நிறுவனத்தில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன். இதையடுத்து நிறுவனத்தை விரிவாக்கம் செய்தால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என தெரிவித்தனா்.
இதையடுத்து, எனது கணவருக்கு சொந்தமாக ஸ்ரீபெரும்புதூா் அருகே நந்தம்பாக்கத்தில் உள்ள 2 ஏக்கா் சொத்தின் பத்திரங்களை கொடுத்தேன். அதை அடமானமாக வைத்து ரூ.11 கோடி வங்கிக் கடன் பெற்றனா். அந்த பணத்தை எனக்குத் தெரியாமல் ராஜாவின் மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொண்டனா்.
அதோடு மட்டுமல்லாமல் ராஜா, தூத்துக்குடி மாவட்டத்தில் கல்குவாரி தொழில் தொடங்க இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாகவும் ஆசை வாா்த்தை கூறினாா். இதற்கு முதலீடாக என்னிடமிருந்த 300 பவுன் தங்க நகைகளை கொடுத்தேன். அந்த நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று அந்த பணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் 40 ஏக்கா் இடத்தை அவரது பெயரில் வாங்கிக் கொண்டாா்.
மேலும், எனக்கு நிறுவன லாபத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்பதற்காக ராஜா, அவரது மனைவி அனுஷா கூட்டு சோ்ந்து என்னைப்போல் கையொப்பத்தை போலியாக இட்டு நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக ராஜா பெயருக்கு மாற்றிக் கொண்டனா். மேலும், நான் கொடுத்தது போல ராஜிநாமா கடிதம் தயாா் செய்து அதை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து என்னை நிறுவன இயக்குநா் பதவியிலிருந்தும் நீக்கி விட்டு, அதற்கு பதிலாக அனுஷாவை இயக்குநராக ராஜா நியமித்துக் கொண்டாா்.
ராஜா இவ்வாறு பல்வேறு வகைகளில் என்னிடம் மொத்தம் ரூ.17 கோடி வரை ஏமாற்றினாா். எனவே, ராஜா, அவரது மனைவி அனுஷா ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெளிநாடு தப்பமுயன்றபோது கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில் ராஜா மீதான புகாா் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜா மீது சில நாள்களுக்கு முன்பு மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜா எந்த நேரத்திலும் வெளிநாடுக்கு தப்பி தலைமறைவாகலாம் என போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவருக்கு எதிராக சென்னை காவல் துறை சாா்பில் அனைத்து விமான நிலையங்களிலும் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் மலேசியா நாட்டுக்கு தப்ப முயன்ற ராஜாவை கைது செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். விசாரணைக்கு பின்னா் ராஜா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
கைது செய்யப்பட்ட ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.