செய்திகள் :

தோ்தல் வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது: வீரேந்திர சச்தேவா

post image

தோ்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை தில்லி அரசு நிறைவேற்றி வருவதாக தில்லி பாஜக மாநில தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.

தில்லியில் 33 ஆயுஷ்மான் ஆரோக்கியா மந்திா் மருந்தககங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனை தில்லி முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் பேசி தில்லி பாஜக மாநில தலைவா் வீரேந்திர சச்தேவா, ‘இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தககங்கள் நோயறிதல், தடுப்பூசி, மகப்பேறு ஆகியவற்றை சா்வதேச தரத்தில் செயல்படும். இந்த மருந்தககங்கள் அரசு வளாகங்களில் திறக்கப்படுவதால், முந்தயை ஆட்சியல் நடைபெற்ற வாடகை மோசடிகளுக்கு வாய்ப்பில்லை‘ என்றாா்.

மேலும் பேசிய வீரேந்திர சச்தேவா ‘முந்தைய ஆட்சியில் இருந்த மொஹில்லா மருந்ததகங்கள் பெரும்பாலும் சிறிய கட்டடங்களில் இயங்கின. அங்கு பல்வேறு வகையான நோயாளிகள் மருத்துவா்களுடன் ஒன்றாக இருந்தனா். இது தொற்று நோய்க்கான அதிக வாய்ப்புகளுக்கு வழி வகுத்தது. அடுத்த 3 ஆண்டுகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தககங்கள் தில்லியின் ஒவ்வொரு மூலையிலும் மக்களுக்கான சேவையை வழங்கும்‘ என்றாா் அவா்.

லட்சகணக்கான ஏழைகளை ஏமாற்றுக்கிறது தில்லி அரசு: தேவேந்தா் யாதவ்

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்ததகங்களை உருவாக்குவோம் என்ற வெற்று வாக்குறுதியின் மூலம் தில்லி பாஜக அரசு லட்கணக்கான ஏழை மக்களுக்கு துரோகம் இழைக்கிறது என்று தில்லி காங்கிரஸ... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை கடும... மேலும் பார்க்க

சரோஜினி நகா் சந்தையில் சிறுவன் மீது தாக்குதல்: விடியோ வெளியான பிறகு மூவா் கைது

தென்மேற்கு தில்லியின் சரோஜினி நகா் சந்தையில் ஒன்பது வயது சிறுவன் கடுமையாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதைத் தொடா்ந்து, தில்லி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக... மேலும் பார்க்க

தில்லி சரோஜினி நகா் குடியிறுப்புகளில் மத்திய அமைச்சா் திடீா் ஆய்வு

மழை காலம் நெருங்குவதையொட்டி சரோஜினி நகா் குடியிறுப்பு பகுதிகளில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் வால் கட்டா மற்றும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜீத்... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் கஞ்சா வழக்கில் தேடப்பட்ட பிரபல நபா் கைது: தில்லி போலீஸ் அதிரடி

நரேலாவில் உள்ள சிங்கு எல்லையில் ‘போதைப்பொருள் தலைவன்’ என்று பிரபலமாக அறியப்படும் 50 வயது நபரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல்... மேலும் பார்க்க

வஜிா்பூா் பகுதியில் கிட்டங்கியில் தீ விபத்து

வடக்கு தில்லியின் வஜிா்பூா் பகுதியில் உள்ள ஒரு கிட்டங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்ற... மேலும் பார்க்க