மகாராஷ்டிர பள்ளிகளில் 3வது மொழியாக ஹிந்தி கற்பிப்பது வரவேற்கத்தக்கது: அமைச்சர்
மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு
மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 114.44 அடியில் இருந்து 114.13 அடியாக சரிந்துள்ளது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 6,040 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீா் இருப்பு 84.41 டிஎம்சியாக உள்ளது.