செய்திகள் :

மாநகரில் கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் தொடங்கி வைத்தார்!

post image

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் ரூ.6.04 கோடியில் நிறுவப்பட்டுள்ள 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்தக் குடிநீா் ஏடிஎம் இயந்திரங்களின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

சென்னை மெரீனா கடற்கரையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்ததுடன், அங்கிருந்தபடியே மாநகரின் பிற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களின் செயல்பாட்டையும் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, மேயர் ப்ரியா, அரசு அதிகாரிகள் மற்றும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

அகமதாபாத் விமான விபத்து: மீட்கப்பட்டவைகள் என்னென்ன?

அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையே எவ்வளவு தங்க நகைகள் மீட்கப்பட்டன?

காந்திநகர்: அகமதாபாத் விமான விபத்து நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளுக்கு இடையில் மீட்கப்பட்ட 100 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகள், சேதமடையாத ஒரு பகவத் கீதை புத்தகம் உள்ளிட்ட பொருள்களை போலீசாரிடம் மீட்புப்... மேலும் பார்க்க

தங்கம் விலை அதிரடி உயர்வு!: எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.74,440-க்கு விற்பனையானது. அதைத்தொடா... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு!

ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள், பேத்திகள் உள்ளிட்ட 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ச... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூா் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால... மேலும் பார்க்க

2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு! - அரசிதழில் அறிவிப்பு வெளியானது

இந்தியாவில் 2027 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அரசிதழில் இன்று(ஜூன் 16) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அதன்படி ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே 9 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 கி.மீ. தொலைவுக்கு சாலையில் ந... மேலும் பார்க்க