செய்திகள் :

அணைக்கட்டு: தேங்கி நிற்கும் மழைநீரால் நோய்த்தொற்று அபாயம்- அரசு பள்ளியை கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

post image

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். சமீபத்தில் வேலூரில் பெய்த கனமழை காரணமாக இந்த அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஒரு வாரமாக மழை நீர் தேங்கி நிற்கின்றது. இந்த பள்ளியின் சுற்று சுவர் அருகிலேயே மழை நீரானது கழிவு நீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. மேலும் இந்த பள்ளியின் வளாகத்திற்குள் உள்ள கழிவறை அருகிலேயே மழை நீரானது தேங்கி நிற்கிறது. இந்த பள்ளியின் அருகிலேயே அகரம் நான்கு முனை சந்திப்பு அருகே எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செய்யப்பட்டு வருகிறது. அங்கு மழை காலங்களில் தேங்கும் நீரானது தாழ்வான பகுதியில் அமைந்து இருக்கும் இந்த பள்ளியின் வளாகத்திற்குள் வந்து அப்படியே நிற்கிறது. 

இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக அகரம் அரசு உயர்நிலை பள்ளியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதியில் பள்ளி வளாகம் இருப்பதினால் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கிறது. பள்ளியின் கழிவறைக்கு அருகிலேயே மழை நீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீர் வடிந்து செல்ல வழியே இல்லாத காரணத்தினால் அப்படியே நிற்கிறது. கோடை மழைக்கே நிலைமை இப்படி என்றால், பருவ மழை காலங்களில் எப்படி தண்ணீர் தேங்கி நிற்கும் என்று யோசித்து பாருங்கள். பருவ மழை காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் நுழையும் நுழைவாயிலில் தண்ணீர் தேங்கி நிற்கும். எனவே மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் தண்ணீர் தேங்கி நிற்காதபடி தாழ்வான பகுதியை மண் கொட்டி மேடாக்க வேண்டும். மழைநீர் தேங்கி நோய்த்தொற்று அபாயமும் நிலவுகிறது. எனவே, இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். 

இது குறித்து அகரம் அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, “மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்து அகரம் ஊராட்சி தலைவருக்கு ஒரு கடிதமாக எழுதி கொடுத்து உள்ளேன். தண்ணீர் தேங்காதபடி பள்ளியின் வளாகத்திற்குள் மண் கொட்டி மேடாக்க அகரம் ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உள்ளார்” என்றார். 

டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

டெல்லி மதராசி காலனி அகற்றப்பட்ட போது தமிழர் குடும்பங்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்வதற்குத் தயாராக இருக்கிறது எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.அதன... மேலும் பார்க்க

தரமணி: தொழில்நுட்பக் கல்லூரி சாலையின் அவலநிலையை சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

சென்னை தரமணி, மத்திய தொழில்நுட்பக் கல்லூரி(CPT) நுழைவு வாயில் ஒட்டி பிரியும் சாலை, பரபரப்பான ராஜிவ் காந்தி சாலையையும், குடியிருப்பு பகுதிகளான ஸ்ரீராம் நகர் , பள்ளிப்பட்டு, களிகுன்றம் போன்ற பகுதிகளையும... மேலும் பார்க்க

திருநெல்வேலி: சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்; பாழாகும் சிறுவர் பூங்கா... சீரமைக்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் தபால் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா, கொரோனா ஊரடங்குக்குப் பிறகு முறையான பராமரிப்பு இல்லாமல் தற்போது பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் குழந... மேலும் பார்க்க

Bike Taxi to Bike Parcel: தடைக்குப் பிறகும் தொடரும் ola, Rapido பைக் டாக்ஸி சேவை.. எப்படி?

கர்நாடக மாநிலத்தில் ஓலா, ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட பைக் டாக்ஸி சேவைகளை ஜூன் 16 ஆம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை மக்களு... மேலும் பார்க்க

Plane crash: ``அவன் கடைசியாக சொன்ன வார்த்தை..'' - பலியான விமானியின் தந்தை கூறி அழுத சோகம்

அகமதாபாத் விமான விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 240-க்கும் மேற்பட்டோர் இந்த கோர விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூப... மேலும் பார்க்க

``1988-ல் நடந்த விமான விபத்து; போதுமான இழப்பீடு வழங்கவில்லை..'' - 37 ஆண்டுகள் போராடும் குடும்பங்கள்

அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நடந்த ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமான விபத்து, ஒரு பெரும் சோக நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த கோர விபத்தில் சனிக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து... மேலும் பார்க்க