செய்திகள் :

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது.

பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெடிகுண்டு பொறுத்தப்பட்டுள்ளதாக, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் இன்று (ஜூன் 18) மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, விமான நிலையத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஹைதராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அந்த விமான நிலையத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், அங்கு தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்காத நிலையில் இந்த மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது மிரட்டல் விடுத்த மர்ம நபரை அடையாளம் காண போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த 2008-ம் ஆண்டு முதல் பேகம்பேட் விமான நிலையம் தனியார் விமானங்கள் இயக்கவும், ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இத்துடன், சில நாள்களுக்கு முன்பு ஜெர்மனியிலிருந்து ஹைதரபாத் வந்த லுஃப்தான்ஸா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:விவோ டி 4 அல்ட்ரா இந்தியாவில் அறிமுகம்: இன்றுமுதல் விற்பனை தொடக்கம்!

குரோஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கனடாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு குரோஷியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று அதிகாரிகளை ஒவ்வொருவ... மேலும் பார்க்க

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்ந... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க