செய்திகள் :

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

post image

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழகி ஷீத்தல்(24). இவரைக் கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை. இந்த நிலையில் ஷீத்தல் உடலானது 15-ஆம் தேதி பானிபட்டில் உள்ள கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பல்வேறு காயங்களுடன் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் வெளியிட்ட அறிக்கையில்,

கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாகக் கிடைத்த தகவலின்படி விசாரணை நடத்தினோம். இதில் காணாமல்போன ஷீத்தலின் உடல் எனத் தெரிய வந்தது.

தொடர் விசாரணையில் ஷீத்தல் மாடலிங் செய்வதற்கு முன் ஒரு உணவகத்தில் பணியாற்றியது தெரிய வந்தது. அந்த உணவகத்திற்குச் சென்ற போலீஸார் சிசிடிவி பதிவை ஆய்வு செய்தனர். அதில் ஷீத்தல் கையில் ஒரு கைப்பையுடனும், அவருடன் ஆண் நண்பர் ஒருவர் காரில் ஏறுவதும் தெரிய வந்தது. இதையடுத்து விசாரணையில், அவரின் ஆண் நண்பர் சுனில் என தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கொலையான ஷீத்தல் சுனிலுக்குச் சொந்தமான உணவகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றியுள்ளனர். அப்போது இருவரும் நெருக்கி பழகி வந்துள்ளனர். ஆனால் சுனில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தை என்பதை அறிந்த பிறகு ஷீத்தல் அவரிடமிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு ஒரு ஆல்பம் படப்பிடிப்பிற்காக பானிபட்டில் உள்ள கிராமத்திற்கு வந்திருந்த ஷீத்தலை சுனில் சந்தித்துள்ளார். அவரை தன்னுடன் உணவகத்திற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இருவரும் காரில் ஏறிய நிலையில் ஷீத்தலுக்கு வேறொரு நபருடன் தொடர் இருப்பதால் தான் தன்னுடனான உறவை துண்டித்ததாக சுனிலுக்கு ஏற்கெனவே சந்தேகம் இருந்தது.

இதனிடையே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.30 மணியளவில் ஷீத்தல் தனது சகோதரிக்கு விடியோ அழைப்பை மேற்கொண்டு சுனில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறியுள்ளார். எனினும் சிறிது நேரத்திலேயே அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவரிடமிருந்த எந்த தகவலும் இல்லை.

அதன்பின்னர், ஜூன் 15ல் பானிபட்டில் அவரது கார் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் ஒருநாள் கழித்து கார்கோடாவில் உள்ள ஒரு கால்வாயில் ஷீத்தலின் உடல் மீட்கப்பட்டது. போலீஸார் விசாரணையில் ஷீத்தல் தன்னிடமிருந்து விலகியதாலும், வேறொரு நபருடன் தொடர்புள்ளதாகச் சந்தேகத்தின் அடிப்படையிலும் ஷீத்தலை கொன்றதாக சுனில் ஒப்புக்கொண்டார்.

சிம்மி என்ற பெயரைக் கொண்ட ஷீத்தல், 9 ஆண்டுகளுக்கு முன்பு பானிபட்டைச் சேர்ந்த சந்தீப் குமாரை மணந்தார், மாடலிங் துறையில் தொடர விரும்புவதால் அடிக்கடி ஏற்பட்ட தகராறுகள் காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீபத்தில் மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் கூலிப்படையை ஏவி கணவரை மனைவி கொன்ற நிலையில், ஹரியாணா மாடல் அழகி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்ந... மேலும் பார்க்க

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க